பல்லை உடைக்கும் பலகாரம்!



திருவண்ணாமலைப் பகுதியின் மண் சார்ந்த கதையைச் சொல்லவருகிறது 'கமர கட்டு' படம். ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் 'சாட்டை' யுவன், 'பசங்க' ஸ்ரீராம், 'சண்டியர்' ரக்ஷாராஜ், மனிஷாஜித் என இளமைப் பட்டாளம் நடித்திருக்கிறது.

''திருவண்ணாமலை, சித்தர்களின் தேசம். எனவே எனது கதையில் காதலோடு ஆன்மிகமும் கலந்திருக்கும். கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு, நகரத்துக் கல்லூரிக்குப்போகும் டீன் ஏஜ் இளசுகளின் காதலைப் பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியலும் உண்டு.

கமரகட்டு என்கிற தின்பண்டம் சிறியதாக இருந்தாலும் தித்திப்பு மிகுந்தது. பலமான அதை வேகமாகக் கடித்தால், பல் உடைந்து  போகும். அதுபோலத்தான் டீன் ஏஜ் இளசுகளின் மனசும். அதை கவனமாகக் கையாளவேண்டும்'' என்று சொல்லும் இயக்குனர் ராம்கி ராமகிருஷ் ணன், இளம் வயதினரின் உளவியலை கண்ணியமாகக் கையாண்டிருக்கிறாராம்.