தோழியருக்கான நட்சத்திர பலன்கள்-செப்டம்பர் 16 முதல் 30 வரை



அஸ்வினி: எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பல வகையிலும் நற்பலன்கள் நடக்கும். 2ல் ராகு - 6ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 7ல்  சுக்கிரன் -  8ல் கேது - 10ல் குரு(வ), சனி(வ) என கிரக நகர்வுகள் இருக்கிறது. தெய்வ பக்தி அதிகரிக்கும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனதில் நிலையான எண்ணம் இருக்கும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும்.

பரணி: வெள்ளை உள்ளம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் காரிய தடை அகலும். மனதில் குழப்பம் நீங்கும். 2ல் ராகு - 6ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 7ல்  சுக்கிரன் -  8ல் கேது - 10ல் குரு(வ), சனி(வ) என கிரக அமைப்பு இருக்கிறது. சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்க மனமகிழ்ச்சி ஏற்படும்.

கிருத்திகை: எந்த சிக்கலையும் சாதகமாக மாற்றும் கலையை அறிந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். தெளிவான சிந்தனை உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். பெருமாளை வணங்க எல்லா நலனும் உண்டாகும்.

ரோஹிணி: பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்யும் குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். 1ல் ராகு - 5ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 6ல்  சுக்கிரன் -  7ல் கேது - 9ல் குரு(வ), சனி(வ) என கிரக இருப்பு இருக்கிறது. எல்லா நன்மைகளும் உண்டாகும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பிரச்சனைகள் குறையும். அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மிருகசீரிஷம்: எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் மனக் கவலை நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை அகலும். எதிலும் திருப்தி நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

திருவாதிரை: வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரயாணத்தில் தடங்கல் அகலும். 4ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 5ல்  சுக்கிரன் -  6ல் கேது - 8ல் குரு(வ), சனி(வ) - 12ல் ராகு என கிரக நகர்வு இருக்கிறது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள் நீங்கும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன்-மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். ஐயப்பனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும்.

புனர்பூசம்: அனைவரிடமும் ஒரே நிலையை கடைபிடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். ஆனாலும் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். சுபச்செலவு அதிகாரிக்கும். பொறுப்புகள் கூடும். மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

பூசம்: எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் வாக்குவாதங்கள் அகலும். 3ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 4ல்  சுக்கிரன் -  5ல் கேது - 7ல் குரு(வ), சனி(வ) - 11ல் ராகு என கிரக ஓட்டம் இருக்கிறது. மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும். முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும்.

ஆயில்யம்: மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை வளரும். 3ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 4ல்  சுக்கிரன் -  5ல் கேது - 7ல் குரு(வ), சனி(வ) - 11ல் ராகு என கிரக சஞ்சாரம் இருக்கிறது. பணவரவு திருப்தி தரும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். தட்சிணாமூர்த்தியை வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

மகம்: எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் செலவுகள் குறையும். 2ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 3ல்  சுக்கிரன் -  4ல் கேது - 6ல் குரு(வ), சனி(வ) - 10ல் ராகு என கிரகங்களின் இருப்பு இருக்கிறது. பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. குலதெய்வத்தை வணங்க உடல் ஆரோக்கியமடையும்.

பூரம்: துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். 2ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 3ல்  சுக்கிரன் -  4ல் கேது - 6ல் குரு(வ), சனி(வ) - 10ல் ராகு என கிரகங்களின் அமைப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபம் அகலும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். கிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும்.

உத்திரம்: தான் சொல்வதுதான் சரி என்று உறுதியாக கூறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விநாயக பெருமானை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

அஸ்தம்: எல்லோரையும் தான் எடுக்கும் முடிவால் வசீகரிக்கும் இயல்பு கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். 1ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 2ல்  சுக்கிரன் -  3ல் கேது - 5ல் குரு(வ), சனி(வ) - 9ல் ராகு என கிரகங்களின் ஸ்தானம் இருக்கிறது. முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். ஆஞ்சநேயரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும்.

சித்திரை: பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மகாலட்சுமியை வழிபட பண கஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி: வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட நீங்கள் விடா முயற்சியுடையவர். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. 1ல்  சுக்கிரன் -  2ல் கேது - 4ல் குரு(வ), சனி(வ) - 8ல் ராகு - 12ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகிறார்கள். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும்.

விசாகம்: எளிதில் கோபம் அடையாமல் பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.  மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும்.

அனுஷம்: அடுத்தவரது ஆலோசனையையும் கேட்டு நடக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் செலவு அதிகரிக்கும். 1ல் கேது - 3ல் குரு(வ), சனி(வ) - 7ல் ராகு - 11ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 12ல்  சுக்கிரன் என கிரகங்களின் நகர்வு இருக்கிறது. நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நலம். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. சிவனை வணங்க எதிர்ப்புகள் விலகும்.

கேட்டை: துடிப்புடன் வேகமாக செயலாற்றும் நீங்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமுடையவர். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து அதிகரிக்கும். 1ல் கேது - 3ல் குரு(வ), சனி(வ) - 7ல் ராகு - 11ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 12ல்  சுக்கிரன் என கிரகங்கள் அமைப்பு இருக்கிறது. மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். உங்கள் செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

மூலம்: சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களான உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். 2ல் குரு(வ), சனி(வ) - 6ல் ராகு - 10ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 11ல்  சுக்கிரன் - 12ல் கேது என கிரகங்கள் அருள் இருக்கிறது.  மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம்: சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்யக் கூடிய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். 2ல் குரு(வ), சனி(வ) - 6ல் ராகு - 10ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 11ல்  சுக்கிரன் - 12ல் கேது என கிரகங்கள் இருக்கிறார்கள். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கிராம தேவதையை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்

உத்திராடம்: எதிலும் நிதானமாக ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். குரு பகவானை வணங்க செல்வம் சேரும்.

திருவோணம்: உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளை செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணத்தேவை உண்டாகும். 1ல் குரு(வ), சனி(வ) - 5ல் ராகு - 9ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 10ல்  சுக்கிரன் - 11ல் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. விநாயகப் பெருமானை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

அவிட்டம்: கடின உழைப்பும், மனோ தைரியமும் உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல், திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பைரவரை வழிபட மனோ தைரியம் கூடும்.

சதயம்: நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் விருப்பங்கள் கைகூடும். 4ல் ராகு - 8ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 9ல்  சுக்கிரன் - 10ல் கேது - 12ல் குரு(வ), சனி(வ) என கிரகங்கள் இருக்கிறார்கள். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். ராகவேந்திரரை வணங்கி வர மனக்கவலை நீங்கும்.

பூரட்டாதி: எடுத்துக் கொண்ட காரியத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் கிடைக்கப்பெறும். தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தன லாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். கணவன்-மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு தடைகள் விலகும். சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

உத்திரட்டாதி: கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். 3ல் ராகு - 7ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 8ல்  சுக்கிரன் - 9ல் கேது - 11ல் குரு(வ), சனி(வ) என கிரகங்கள் நகர்வு அமைந்திருக்கிறது. நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நல் உதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள். ஆயுள் அபிவிருத்தி அதிகரிக்கும். சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். சரஸ்வதி தேவியை வணங்க மனதில் உத்வேகம் ஏற்படும்.

ரேவதி: நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் வளமும் நலமும் அதிகம் பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் இதுவரை செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து விடும். 3ல் ராகு - 7ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 8ல்  சுக்கிரன் - 9ல் கேது - 11ல் குரு(வ), சனி(வ) என கிரகங்களின் ஆசிகள் இருக்கிறது. உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். வாராகி தேவியை வணங்க பொருளாதார உயர்வு ஏற்படும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்