காதலே காதலே...



‘சாரங்கி’ இந்த சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண் கலைஞர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது.

இந்த வாத்தியத்தை வாசிக்கும் ஒரே தென்னிந்தியப் பெண் என்னும் புகழுக்கு உரியவராக இருப்பவர் மனோன்மணி. சாரங்கியை வாசிப்பது அவ்வளவு
எளிதானதல்ல. விரல் நகத்தின் பக்கத்தைப் பயன்படுத்தி வாசிக்க வேண்டும். ஆனால், இதிலிருந்து கிளம்பும் நாதம் அலாதியான இனிமை கொண்டது. இசையை வாசிப்பதோடு அதை சுவாசிக்க செய்யும் குடும்பம் இவருடையது.

“தாத்தா பி.வி.சண்முகம், அம்மா சரோஜா, இருவரும் தில்ரூபா பிளேயர். எம்.எஸ்.வி சாரிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் வரை ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் அம்மா இவர்களிடம் வாசித்திருக்காங்க. இளையராஜா சாரின் குழுவில் அம்மா இசைத்து வந்திருக்காங்க. அவங்க வாசிக்கிறதை சின்ன வயசிலிருந்தே பார்த்திருக்கிறேன். வீடடில் எப்போதும் இசை, கச்சேரி என்பதால், நானும் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன்.

அதே சமயம் எனக்கு அம்மா, தாத்தா போல் வித்தியாசமா இசைக் கருவியை கற்றுக் கொள்ளணும்ன்னு விருப்பம். அந்த சமயத்தில் சாரங்கினு ஒரு இசைக்கருவி பற்றி தெரிய வந்தது. அதை கற்றுக் கொள்ளணும்ன்னு ஆசை வந்தது. சாரங்கி வாசிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ரொம்பவே கஷ்டமானது.

அந்த கருவிக்குப் பழகி, அது நமக்கு வசப்பட கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகும். இசைக் குடும்பத்தில் இருந்தாலும் அம்மா-அப்பா இருவரும் படிப்புக்கு தான் முக்கியத்துவம் தந்தாங்க. எம்.சி.ஏ. முடிச்சிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு எல்லா பெண்களைப் போல் எனக்கு கல்யாணமாச்சு.

அதன் பிறகு தான் என் இசை ஆர்வத்தை பற்றி என் கணவரிடம் பேசினேன். அவருக்கும் அந்த வாத்தியம் பத்தித் தெரிஞ்சிருந்தது. ரொம்பவே என்கரேஜ் பண்ணினார்” என்று கூறும் மனோன்மணி, சாரங்கி பயின்ற அனுபவத்தை பற்றி விவரித்தார்.

“சாரங்கியில், தில்ரூபா மாதிரி சப்தம் இருந்தாலும், அதைவிட பவர்ஃபுல்லா அழகான டோன் இருக்கும். இதன் மீது இருந்த ஆர்வத்தால் யூடியூப்ல பார்த்து வாசிக்க ஆரம்பிச்சேன். மும்பை, ஹைதராபாத்னு வேற வேற இடங்கள்ல நாலு சாரங்கி வாங்கினேன். ஆனா, எதுலயுமே எனக்கு சரியான டோன் கிடைக்கலை. இதன் உன்னதமான இசையினை ராஜஸ்தானில்தான் கேட்க முடியும்.

அதனால் வடக்கில் போய் கற்றுக்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தேன். சமூகவலைத்தளத்தில் அதற்கான பயிற்சி குறித்து தேடினேன். அதன் மூலம் பிரபல சாரங்கி வித்வானான உஸ்தாத் குலாம் சபீர் கான் தில்லியில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவரிடம் மாணவியாக சேர்ந்தேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறேன்” என்ற மனோன்மணி, தென்னிந்தியாவின் ஒரே பெண் சாரங்கி இசைக் கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.திரைப்படப் பாடல்களுக்கும் சாரங்கி வாசிப்பதில் பிஸியாக இருக்கும்  மனோன்மணி, முதன் முதல் சாரங்கி வாசித்த திரைப்

அன்னம் அரசு

ஆ.வின்சென்ட் பால்