தோழியருக்கான குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்-(அக்டோபர் 16 முதல் 31 வரை)



1. அசுவினி: எதையும் தாங்கும் இதயமும், அனைவரின் உள்ளத்தில் இடம் பிடிக்க உதவும் மனமும் கொண்ட உங்களுக்கு இம்மாதம் 28-ந்தேதி குரு  9-ம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் உங்களின் ஆசைகள் யாவும் ஒவ்வொன்றாய் நிறைவேறும் நாள் உங்களை நாடி வருகின்றது. குருதான் பெயர்ச்சி அடைவதற்கு முன்பே ஒரு மாதம் முன்னால் பார்வை செய்கிறார். எனவே உங்களின் காட்டில் மழைதான் போங்கள். தேக பலம் சீராகும். பண வரவில் இருந்துவந்த தடைகள் நீங்கி தனவரவு சரளமாகும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கூடும். மகப்பேறு வேண்டி நிற்போர் பலன் அடைவர். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். அயல்நாடு செல்வீர்கள். கணவன், மனைவி உறவு அன்பு கூடுதலாகி மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் அன்று மயிலை நவசக்தி விநாயகரை தரிசிக்க நன்மைகள் கூடும்.

2. பரணி: அன்பே தெய்வம் என்னும் தார்மீக மந்திரத்தை கையாளும் வெள்ளை மனம் கொண்ட பண்பாளரான உங்களுக்கு இந்த குருமாற்றம் ஓர் இனிய நற்செய்திகள் உங்களைத்தேடி வந்து அசத்தும் ஓர் நல்ல மாதமாக இம்மாதம் அமைய உள்ளது. கிரக பலம் மிகவும் சாதகமாய் சஞ்சரிப்பதால் பணவரவிற்கு புதிய வழிகள் தென்படும். உடல்நலம் திருப்தியளிக்கும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். உற்றார், உறவினர்களின் வருகையால் வீடே கலகலப்பாகும். சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். இல்லறம் நல்லறமாய் இனிமை சேர்க்கும் நல்ல மாதமாய் மலரும். திங்கட்கிழமை மாங்காடு காமாட்சி தரிசனம் மனதை மகிழ்விக்கும்.

3. கிருத்திகை: மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று பிறரின் உணர்வுகட்கு மதிப்பளிக்கும் குணவதிகளான உங்களுக்கு இந்த குருபெயர்ச்சியினால் தடைகள் விலகி தனநலம் சேரும் மாதமாய் மலர இருக்கின்றது. இம்மாத பிற்பகுதியில் நல்ல நன்மைகள் வந்து சேரும். தேகத்தில் பொலிவும், மலர்ச்சியும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வண்டி, வாகன யோகம் அமைவதுடன் மண், மனைகளும் வந்து சேரும் ஓர் நல்ல மாதமிது. ஆன்மிகப்பயணங்கள் அமையும். தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை விலகி ஒற்றுமை கூடுதலாகும். புதன்கிழமையன்று மகாவிஷ்ணு தரிசனம் மனதை மகிழ்விக்கும்.

4. ரோகிணி: சிரித்து வாழ வேண்டும் என்னும் சிறப்பான எண்ணங்களை கையில் எடுத்து அனைவருக்கும் உதவும் உத்தம குணம் உள்ள திறமைசாலிப் பெண்மணிகளான உங்களுக்கு இம்மாத குருபெயர்ச்சி ஓர் இனிய நற்செய்திகளை அள்ளித்தரும் மாதமாய் பெருமையுடன் மலரக்காத்திருக்கின்றது. கிரகங்களின் சஞ்சார நிலை அனுகூலமாய் தென்படுவதால் உங்களின் தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். வீட்டில் நிம்மதியும், மனதில் அமைதியும் ஏற்படும். மக்களின் கல்வி முன்னனேற்றம் கண்டு மகிழ்வீர்கள். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி இருவரும் பரஸ்பர அன்பை பகிர்ந்துகொள்வர். திங்கட்கிழமை மகாலட்சுமியை தரிசிக்க மகிழ்ச்சி அதிகரிக்கும்.

5. மிருகசீரிடம்: சோதனைகள் எத்தனை வரினும் கலங்கிடாமல் மனஉறுதியுடன் போராடி வெற்றிக்கொடி நாட்டும் வீரரான உங்களுக்கு குருபெயர்ச்சியினால் இம்மாதம் அமோகமான நற்பலன்களை அள்ளித்தர உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் மிகவும் சாதகமாய் காணப்படுவதால் முகம் பொலிவுடனும், வசீகரமாகவும் ஜொலிக்கும். தானாகவே ஆடிப்பாடி மகிழ்வீர்கள். மனதில் சந்தோஷம் தாண்டவமாடும். உங்களின் முயற்சிகளை கணவர் பாராட்டும் இனிய நேரம். சிலர் புதிய வீட்டிற்கு குடிபோவர். இல்லறத்தில் இருந்த மனவேற்றுமைகள் விலகி ஒற்றுமையாவீர்கள். சனிக்கிழமையன்று சனீஸ்வரர் தரிசனம் சங்கடங்கள் விலகும்.

6. திருவாதிரை: அன்பே சத்தியம் என்று அனைவரிடமும் என்றும் பொறுமையுடன் செயல்படும் மதிநலம் மிக்க பெண்மணிகளான உங்களுக்கு இந்த மாத குருபெயர்ச்சியினால் பலமான நன்மை வந்து சேரும் ஓர் நல்ல மாதமாய் இம்மாதம் மலர உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் அருமையாய் உள்ளதால் எடுத்த எந்த ஓர் செயலிலும் வெற்றி காண்பீர்கள்.நீண்டநாட்களாய் தடைபட்டு வந்த செயல்களில் வெற்றியின் வழிகள் புலனாகும். உடல்நலம் தெம்பாகும். தந்தையின் அன்பு மழையால் திக்குமுக்காடிப்போவீர்கள். பிதுர் சொத்துக்களில் இருந்தவந்த பிரச்னைகள் தீரும். திருமண வாழ்வு இம்மாதம் திருப்தி அளிக்கும் மாதமாக அமையும். புதன்கிழமையன்று நாகரை வழிபட வாழ்வு நலம்பெறும்.

7. புனர்பூசம்: கடமையைக் கருத்தில் கொண்டு செயலாற்றும் கர்ம வீராங்கனைகளான உங்களின் நீண்டநாளைய ஏக்கங்கள் ஒவ்வொன்றையும் இந்த குருபெயர்ச்சியின் மூலம் நிறைவேறக் காத்திருக்கும் ஓர் இனிய மாதமாக இம்மாதம் உங்களை வரவேற்கின்றது. இம்மாத பிற்பகுதி முதல் ஓர் இனிமையான பொற்காலம் ஆரம்பம். எனவே அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்தான். தேகபலம் பளிச்சிடும். தனவரவு இரட்டிப்பாகும். மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். சகோதரர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. புத்திர பாக்கியம் கிட்டும் நேரமும் உள்ளது. தம்பதியிடையில் இருந்துவந்த உட்பூசல்கள் மறைந்து நிம்மதி கிட்டும். ஞாயிறு அன்று சூரிய பகவானை தரிசிக்க ஆரோக்கியம் உண்டாகும்.

8.பூசம்: எப்போதும் பலனை எதிர்பாராமல் அனைவருக்கும் ஓடிப்போய் உதவி செய்யும் உத்தம நெஞ்சங்களான உங்களின் திறமைகள் உலகினரால் போற்றப்படும் மாதமாய் இம்மாதம் உங்களுக்கு அமைய உள்ளது. இம்மாத கிரகங்களின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாய் உள்ளதால் எடுத்த காரியங்கள்் யாவையும் கச்சிதமாய் செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தவரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அபரிமிதமான உடல் உழைப்பால் உயர்ந்து நிற்பீர்கள். சில நேரம் மனதில் சோர்வு தென்படலாம். எனவே தேவையற்ற பதட்டங்கள் வேண்டாம். தாயாரின்  பிரத்யேகமான
பாசம் கண்டு மகிழ்ந்து போவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.  இல்லறம் இன்பங்களை அள்ளித்தரும் நல்லறமாய் மலர
உள்ளது.

9. ஆயில்யம்: காரியத்தில் கண் வைக்கும் சாதனைப்பெண்மணிகளான உங்களுக்கு இம்மாத குருபெயர்ச்சி ஓர் திருப்புமுனை மாதமாய் நீங்கள் எண்ணிப்பார்த்தேயிராதபடி மலர்வதற்கு காத்திருக்கின்றது. இம்மாத கிரகங்களின் சஞ்சாரம் அதிர்ஷ்ட தேவதை உங்களைத்தேடி வந்து கதவைத்தட்டும் ஓர் நல்ல காலமாய் அமைய உள்ளது. உடல்நலம் நன்கு பொலிவடையும். மனதிற்கு சந்தோஷம் தரும் இனிய நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்துறைப் பெண்மணிகளுக்கு புதிய இடமாற்றம் வரலாம். சிலநேரம் மனதில் சலனங்கள் ஏற்படும். எனவே ஆன்மிகத்தில் கவனம் செலுத்த நலம். தம்பதிகள் இருவரின் மனதில் சந்தோஷப் பூ பூக்கும் இனிய நேரம். வெள்ளிக்கிழமை விஜயலட்சுமியை சேவிக்க விருப்பம் நிறைவேறும்.

10. மகம்:  உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடிக்கும் கடும் போராளிகளான உங்களை அதிர்ஷ்டக்காற்று வந்து கதவைத் தட்டும் இனிய மாதமாய் இந்த குருபெயர்ச்சி அமையக்காத்திருக்கின்றது. இம்மாத கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் மேம்படும். தனவரவை இரட்டிப்பாக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவித தெம்பும், தைரியமும் உண்டாகும். அரசியல்துறைப் பெண்டிர்கட்கு மேலிடத்தின் ஆதரவான பார்வை கிட்டும். புதிய பதவிகள், பாராட்டுக்கள் சேரும். ஆன்மிகப்பயணமும் அமையும். கணவன், மனைவி இருவரும் மனம் ஒருமித்துப் போகும் நேரம். சனிக்கிழமை பார்வையற்றவர்கட்கு உதவ பாவங்கள் குறையும்.

11. பூரம்: சிரித்துப்பேசும் குணமும், நட்பிற்கு முதலிடம் தரும் நல்ல உள்ளமும் கொண்ட உத்தமப் பெண்மணிகளான உங்கள் ஏக்கங்கள் தீரும் ஓர் இனிய மாதமாய் இந்த குருபெயர்ச்சி உங்களை இனிதே வரவேற்கின்றது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாய் உள்ளதால் எடுத்த காரியங்கள் அனைத்திலுமே வெற்றி தேவதை உங்களைத்தேடி வந்து அசத்தும் இனிய நேரம். உடல்நலம் தெளிவாகும். தனவரவில் இருந்துவந்த தடைகள் நீங்கும். தாய் வீட்டின் மூலம் பிதுர் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புண்ய யாத்திரை செல்வீர்கள். வீடு, வாகனம், மண், மனைகள் வந்து சேரும். தம்பதிகளின் வாழ்வில் ஓர் உன்னதமான வசந்தகாலம் ஆரம்பம். சனிக்கிழமையன்று கருட தரிசனம் வாழ்வில் கவலைகள் தீரும்.

12. உத்திரம்: அன்பின் மறுபக்கமும், பிறருக்காகவே வாழும் தன்னலமற்ற தியாகப் பெண்மணிகளான தங்களுக்கு இம்மாத குருபெயர்ச்சி ஓர் மலர்வைத் தரக்காத்திருக்கின்றது. இம்மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாய் தென்படுவதால் எதிலும் வெற்றிக்கொடி உங்களுக்கேதான். பணவரத்து இரட்டிப்பாகும். பழைய சொத்துக்களை மாற்றி புதிய சொத்து வாங்குவீர்கள். சுபமங்கள நிகழ்வுகள் வீட்டில் நடைபெறும். உறவினர்களின் வருகையால் வீடே கலகலப்பாகும். உத்தியோகத்துறையினர்கட்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இல்லற வாழ்வில் ஓர் இனிமையான அற்புதமான நேரமிது. புதன்கிழமையன்று ஹயக்கிரீவரை தரிசிக்க அனைத்தும் நலமே.

13. அஸ்தம்: எடுத்த செயல்கள் எதுவாக இருப்பினும் அதனை நல்ல பொறுப்புடன் செய்து முடிக்கும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களை மகிழ்விக்க இம்மாத குருபெயர்ச்சி அதிவேகமாய் வந்து வரவேற்கின்றது. இம்மாதம் கிரக நிலைகளால் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் செயலாகும். தேக ஆரோக்கியம் சீராகும். தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். தாய் வீட்டாரிடம் ஏற்பட்ட சின்ன மனவருத்தங்கள் மறையும். குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும் உண்டாகும். கடன் சுமைகள் தீரும். சிலர் புதிய வங்கியில் கணக்கைத் தொடங்குவர். அயல்நாடு செல்லும் யோகமும் சிலருக்குண்டு. இல்லறத்தின் அதிகமான இன்பங்களை உணரும் நல்ல தருணமிது. வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை தரிசிக்க தடைகள் விலகும்.

14. சித்திரை: சுயசிந்தனையும், மற்றவர்களுக்காக வாழும் தியாக உள்ளமும் கொண்ட முன்கோபமும் சற்றே உடைய சாதனைப் பெண்மணிகளான உங்களின் திறமைகளால் உயர்ந்து நிற்கும் ஓர் நல்ல மாதமாய் இந்த குருபெயர்ச்சி உங்களை மகிழ்விக்க உள்ளது. இம்மாத கிரகங்களின் சஞ்சார நிலை நன்மை தர உள்ளதால் உடல்நலம் படிப்படியாய் குணம் ஆகும். புதிய நட்பைத் தவிர்த்தல் நலம். மனதிற்கு சந்தோஷம் தரும் நற்செய்திகள் அயல்நாட்டிலிருந்து வரும். முகம் வசீகரமாகும். சித்தர்களின் ஆசி கிட்டும். உத்தியோகத்துறைப் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு வரும் நல்ல நேரம். கணவன், மனைவி இருவருக்கும் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட துன்பங்கள் விலகி ஓடும்.

15. சுவாதி: சாதனை செய்வதே நம் இலக்கு என்று மனதில் துணிவுடன் போராடி வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் வெற்றியின் ராணிகளான உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி ஓர் அபாரமான நற்பலன்கள் கிட்டும் நல்ல மாதமாய் வர உள்ளது. இம்மாத கிரகங்களின் சஞ்சார நிலை மிகவும் அனுகூலமாக உள்ளதால் உடல்நலம் நன்கு சீரடையும். தனவரவிற்கு வழி உதயமாகும். சகோதரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். சனி பலமாய் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். கேட்டது எல்லாமே கிடைக்கும் நேரமிது. தாயாரின் அன்பைக்கண்டு நெகிழ்ந்துபோகக்கூடிய தருணமிது. தம்பதிகளிடையே இருந்த விரிசல்கள் நீங்கி விருப்பம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று மீனாட்சியை தரிசிக்க வெற்றி நிச்சயம்.

16. விசாகம்: சுயமுயற்சி ஒன்றையே குறிக்கோளாய் எண்ணி என்றும் ஓயாமல் போராடி வெற்றி பெறும் திறமையின் நாயகிகளான உங்களின் எண்ணங்கள் செயலாகும் இனிமையான நல்ல மாதமாக இம்மாத குருபெயர்ச்சி அமைய உள்ளது. இம்மாத கிரகங்களின் சஞ்சார நிலை மிகவும் சாதகமாயும், சனியின் பலம் அதிகமாகவும் காணப்படுவதால் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி எனப்பாடத்தோன்றும். தேகநலம் சீரடையும். மனச்சலனங்கள் மறையும். புத்திர பாக்யம் அமையும் யோகமும் சிலருக்கு உண்டு. வீட்டில் திருமணம், சுபநிகழ்வுகள் கைகூடி வரும் காலமிது. கணவன், மனைவி கருத்து ஒருமித்து செயலாற்றும் நல்ல மாதமிது. திங்கட்கிழைமையன்று சந்திரசேகர் தரிசனம் சலனங்கள் விலகும்.

17. அனுஷம்: என்றும் சிரித்த முகத்துடன், நல்ல இயல்பான குணமும், தங்களின் வாக்கு சாதுர்யத்தினால் எடுத்த செயலை இனிதே வேகமாய் செய்து முடிக்கும் பொறுப்பான பெண்மணிகளான உங்களின் கனவுகள் எல்லாம் இன்பமாய் நிறைவேறும் குருபெயர்ச்சியாய் இம்மாதம் உங்களை இனிதே வரவேற்கின்றது. எனவே நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் வெற்றிதான். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி சந்தோஷம் வந்து எட்டிப்பார்க்கும். தனவரவு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் அமையும். உத்தியோகத்துறை பெண்டிர்கட்கு பதவி உயர்வு கிட்டும். ஆன்மிகப்பயணங்கள் செல்வீர்கள். இல்லறம் நல்லறமாய் வாழ்வில் புது தெம்பளிக்கும் நல்ல மாதமிது. திங்கட்கிழமை மாங்காடு காமாட்சி தரிசனம் மனதிற்கு இதம் அளிக்கும்.

18. கேட்டை:  நெஞ்சில் உறுதியுடன் எடுத்த செயலை முடிக்கும் வரை, மனஉறுதியுடன் போராடும் வலிமை மிக்க பெண்மணிகளான உங்களின் சாதனைகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இம்மாத குருபெயர்ச்சி வர இருக்கின்றது. இம்மாத கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலைமையில் சஞ்சரிப்பதால் எதையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பும், தெம்பும் என அட்டகாசமாய் வலம் வருவீர்கள். வீட்டில் மங்களகரமான சுபநிகழ்வுகள் கூடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் அமையும் நேரம். தம்பதிகளிடையே இருந்துவந்த வெறுப்புக்கள் விலகி விருப்பம் கூடும். ஞாயிறு அன்று ரவீஸ்வரர் தரிசனம் மனதை தெளிவிக்கும்.

19. மூலம்: அன்பின் அடிமைகளான திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் திறமைகள், சாதனைகள், சமுதாயத்தில் பாராட்டு பெறும் ஓர் இனிமையான மாதமாய் இந்த குருபெயர்ச்சி அமைய இருக்கின்றது. இம்மாத கிரக சஞ்சார நிலை மிகவும் சாதகமான முறையில் உலா வருவதால் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பண வரவில் சீரான நிலை உருவாகும். அறிவுக்கூர்மையினால் குடும்பத்தில் உயர்ந்து நிற்பீர்கள். சகோதரர்களின் ஆதரவால் அகம் மகிழ்வீர்கள். வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் சேரும். தெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப்பயணங்கள் செல்வீர்கள். மணவாழ்க்கையில் மகிழ்ச்சிகள் வந்து சேரும் ஓர் இனிய நேரம். திங்கட்கிழமையன்று பார்வதி தரிசனம் பாபங்கள் போக்கும்.

20. பூராடம்: சுறுசுறுப்புடன் எப்போதும் செயல் விவேகம் கொண்ட வெற்றிப்பெண்மணிகளான உங்களின் திறமைகள் உலகத்தினரால் போற்றப்படும் ஓர் நல்ல மாதமாய் இந்த குருபெயர்ச்சி பலன் தர இருக்கின்றது. இம்மாதம் கிரக சஞ்சார நிலையில் அனுகூலமாக சஞ்சாரம் அமைந்துள்ளதால்
உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். கலைத்துறையில் பணிபுரியும் பெண்கள் புதிய ஒப்பந்தங்கள், வெளிநாட்டுப்பயணங்கள் என மனம் மகிழும் தருணம். சித்தர்களின் தரிசனமும், ஆசியும் கிட்டும். திருமண வாழ்வு மனதிற்குப் பிடித்த மகிழ்ச்சி தரும் மாதமிது. செவ்வாய்க்கிழமையன்று
பைரவரை தரிசிக்க எதிரிகள் ஓடுவர்.

21. உத்திராடம்: உயர்ந்த எண்ணங்களும், பரந்த மனப்பான்மையுடன் விட்டுக்கொடுத்து வாழும் நல்ல உள்ளம் கொண்ட தியாகப்பெண்மணிகளான உங்களின் திறமைகள் வெளிப்படும் குருபெயர்ச்சியாய் இம்மாதம் அமைய உள்ளது. இம்மாத பிற்பகுதியில் மிக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கிரக நிலைகள் சாதகமாய் உள்ளதால் மனசுலேசாகும். முகம் வசீகரமாகும். பழைய வீட்டை மாற்றி புதிதாய் மாற்றியமைப்பீர்கள். தடைபட்ட திருமண முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்துறைப் பெண்டிர்கட்கு நீண்டநாட்களாய் வரவேண்டிய அரியர்ஸ் பணம் வந்து சேரும். வாகன வகையில் செலவுண்டு. ஞானிகள் தரிசனம் கிடைக்கும். இல்லறம் நல்லறமாய் மனதை வருடும் ஓர் அற்புதமான நேரம். வியாழன் அன்று செந்தில்நாதன்
தரிசனம் செல்வ வளம் பெருகும்.

22. திருவோணம்: அனைவருக்கும் ஆலோசனை கூறும் மதிநலமும், கண்ணால் கண்டதை கையால் உடனுக்குடன் செய்து முடிக்கும் திறமைசாலிப் பெண்மணிகளான உங்களின் கனவுகள் நிறைவேறும் ஓர் நல்ல மாதமாய் இந்த குருபெயர்ச்சி அமையக் காத்திருக்கின்றது. இம்மாத கிரக சஞ்சாரம் உங்களின் மனதைப் பிடிக்கும் வண்ணம் அமைய இருக்கின்றது.  மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்பார்களே அதுபோன்றே எக்காரியங்களிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். தேகம் சௌக்கியமாகும். பணவரவு இரட்டிப்பாகும். பகைவர்களின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் தலை குனிவர். தெய்வ வழிபாடு கிட்டும். இல்லறத்தில் வசந்தம் வந்து மனதை நெருடும் ஓர் இனிய மாதமிது. செவ்வாய் அன்று கருமாரியை சேவிக்க காரியத்தடைகள் நீங்கும்.

23. அவிட்டம்: உயர்ந்த எண்ணங்களோடு, பரந்த மனப்பான்மையும் கொண்ட ஒழுக்க சீலம் உடைய பெண்மணிகளான உங்களின் நெடுநாளைய முயற்சிகள் வெற்றி பெறும் ஓர் நல்ல மாதமாய் அமைய இந்த குருபெயர்ச்சி உங்களைக் கனிவுடன் வரவேற்கின்றது. இம்மாத கிரக சஞ்சார நிலை ஆதரவாய் காணப்படுவதால் தேக பலம் அதிகரிக்கும். மனதில் தெம்பும், உற்சாகமும் பிறக்கும். உறவினர்களின் மத்தியில் அந்தஸ்து உயரும். இல்லறத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணம். சித்தர்களின் ஆசிகள் கிட்டும். கலைத்துறையினர் அயல்நாடு சென்று வருவர். அதன் பொருட்டு லாபம், புதிய வாய்ப்பும் கிட்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஆரம்பம் வந்து எட்டிப்பார்க்கும். சனிக்கிழமையன்று உடல் ஊனமுற்றோருக்கு உதவ சலனங்கள் விலகும்.

24. சதயம்: எப்போதும், எதையும் இருமுறை யோசித்து செயலாற்றும் மனப்பக்குவமும், மதிநலத்தால் எவரையும் அநாவசியமாய் வெற்றி காணும் செயல்நாயகிகளான உங்களை குளிர்விக்க இம்மாத குருபெயர்ச்சி உங்களை இனிதே வரவேற்க உள்ளது. கிரக சஞ்சாரம் இம்மாதம் அனுசரணையாய் காணப்படுவதால் நீங்கள் தொட்டது துலங்கும் காலம். நெடுநாளைய கனவுகள் நனவாகும். எண்ணங்கள் பலிதமாகும். நீண்ட நாட்களுக்குப்பின்னர் சிநேகிதியை சந்திப்பீர். நட்பினால் நன்மைகள் வந்து சேரும். மனோபலம் கூடும். பணவரவு இரட்டிப்பாகும். சிலருக்கு புத்திரப்பேறு கிட்டும். ஆன்மிகப்பயணம் கிட்டும். இல்வாழ்க்கையில் இன்ப உலா காணும் மகிழ்ச்சியான மாதமிது. வெள்ளிக்கிழமையன்று நித்ய கல்யாண பெருமாளை தரிசிக்க நினைத்தது நடக்கும்.

25. பூரட்டாதி: எண்ணியது எண்ணியாங்கு எய்துவர் என்னும்படி நினைத்த காரியங்கள் துலங்கும் ஓர் நல்ல மாதமாய் அமைய இந்த குருபெயர்ச்சி அமைய இருக்கின்றது. இம்மாத கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவாய் சஞ்சாரம் செய்வதால் உங்களின் காட்டில் பணமழைதான் போங்கள்.  நீண்ட நாளைய ஏக்கங்கள், ஆசைகள், எண்ணங்கள் செயல் வடிவம் பெறும் ஓர் அற்புதமான இனிய நேரம். மனம் லேசாகும். முகத்தில் வசீகரமும், பொலிவும் உண்டாகும். மாணவிகள் கல்வியில் முதலிடம் பிடிப்பர். அரசாங்க வேலை அமையும் யோகமும் சிலருக்கு வந்து வாய்க்கும். கணவன், மனைவி உறவில் அன்பும், பாசமும் அதிகரிக்கக் கூடும். செவ்வாய்க்கிழமை பாலமுருகன் தரிசனம் பாபங்கள் அகலும்.

26. உத்திரட்டாதி:  அதிர்ஷ்ட தேவதையின் அன்பைப் பெற்ற தாங்கள் எண்ணிய காரியங்கள், செய்துவரும் செயல்கள் யாவும் வெற்றி பெற இம்மாத குருபெயர்ச்சி உங்களுக்கு அள்ளித்தர உள்ளது. கிரகங்களின் சஞ்சார நிலை உங்களின் மனதை மகிழ்விக்க உள்ளது. பணபலம் அதிகரிக்கும். தேகம் ஆரோக்கியம் கூடுதலாகும். தாய் வீட்டின் அன்பால் மகிழ்ந்து போவீர்கள். குலதெய்வ வழிபாடுகளைச் செய்து முடிப்பீர்கள். கடன் சுமைகள் குறையும். ஆன்மிகப்பயணங்கள் செல்ல அழைப்பு வரும். சிலருக்கு பணியிட மாற்றம் வரலாம். கணவரின் உத்தியோக உயர்வால் மகிழ்வீர்கள். தம்பதிகளிடையே இருந்துவந்த மனக்கசப்புக்கள் நீங்கும். சனியன்று காஞ்சி வரதராஜரை சேவிக்க வாழ்வு வளம் பெறும்.

27. ரேவதி: என்றும் தன் சுயகாரியத்தில் கண்ணாய் நின்று செயல்பட்டு தன் மதியூகத்தினால் வெற்றிக்கொடி நாட்டும் வீரப்பெண்
மணிகளான உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி நன்கு மலர்வதற்கு காத்திருக்கின்றது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுசரணையாய் உள்ளதால் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி எனப்பாடத்தோன்றும். உடல்நலம் சுகம் அடையும். மனநலம் ஆரோக்கியமாகும். பணபலம் கூடும். சகோதரர்களின் அன்பால் நெகிழ்ந்து போவீர்கள். பிதுர்க்களின் சொத்துக்கள் கிட்டும். ஞானிகளை தரிசிப்பீர்கள். ஆன்மிகப்பயணம் அமையும். இல்லற வாழ்வில் இன்பம் அதிகரிக்கும் இனிமையான நேரம். செவ்வாய்க்கிழமையன்று காளியை சேவிக்க காரியத்தடை விலகும்.