*ஒட்டகத்தை விட அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
*ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இப்பெயர்.
*மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை என்கிற அசுர வேகத்தில் மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.
*காகம் ஒரு மணிக்கு 45 மைல்வேகத்தில் பறக்கும்.
*ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்.
*உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் ‘பப்ளியீ’ என்ற வௌவால் இனமாகும்.
*டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும்.
*நீலத் திமிங்கலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.
*வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுக்கும். குட்டிகளை கவனிக்கும் பணியை மட்டுமே செய்யும்.
*ஜெல்லி மீனில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
*பெங்குவின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.
*மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
*பிறந்த யானைக் குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.
- ஜெ.ஆருஷ் அதர்வா, திருவண்ணாமலை.