இந்தியாவின் இளைய இதயங்கள்



இதயம் நமக்கே நமக்காக வாழ்நாளெல்லாம் துடிக்கும் ஒரே உயிர் வஸ்து. நமக்கு மிகப் பிடித்தமானவர்களை இதயத்தில் வைத்திருக்கிறோம் என்போம். நீ என் உயிர் என்பதற்கு அடுத்த நிலையில் நம் இதயத்தையே அவர்களுக்கு உருவகப்படுத்துவோம். மனிதன் உயிர் வாழ இதயம் போல் இன்றியமையாத உடல் உறுப்பு பிறிதொன்று இல்லை. 
ஆனால், இந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி என்றுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இதயம் எனும் உயிர் காக்கும் உன்னத உறுப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி அதை நோக்கிய பயணம்தான் இந்தத் தொடர். இந்த இதழில் இளைய சமுதாயம் இதய நலனில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி பார்ப்போம்.
 
இளைஞர்களும் இதய நோயும்
சமீப காலங்களில், நான் எண்ணற்ற இளம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இவர்கள் 20, 30 மற்றும் 40 வயதுடைய இளைய தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில், இந்த வயதுடையவர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்படும் நோயாக கருதப்பட்ட கடுமையான இதயப் பிரச்சினைகளுடன் இவர்கள் இப்போது உள்ளனர். 

அப்போலோ ஹெல்த் ஆஃப் தி நேஷன் அறிக்கை 2024 [The Apollo Health of the Nation Report 2024] மிகவும் ஆபத்தான இந்த போக்கை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவில் இப்போது நிகழும் 40%-க்கும் மேற்பட்ட மாரடைப்புகளில், பாதிக்கப்படுபவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கவலைக்குரிய ஒன்றாகி இருக்கிறது.   இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; இது ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளிலும், க்ளினிக்குகளிலும்  நாம் கண்கூடாகப் பார்க்கும்  அப்பட்டமான யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது.
 
இந்த இளைஞர்கள் பெரும்பாலும் பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள். ஒரு பக்கம் அதிக நேரம் பிடிக்கும், டென்ஷனான வேலை, மறுபக்கம் தங்களுடைய   குடும்பத்தின் மீதிருக்கும் பொறுப்புகள் என இவை இரண்டையும் இவர்கள் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் சரிசமமாக கையாள முயன்று வருகிறார்கள். 

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், அவர்களின் வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதைதான்.

இன்றைய இளம்தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களில் கிட்டத்தட்ட 60% பேர், தங்கள் பணியிடங்களில் உட்கார்ந்தோ அல்லது பணி நிமித்தமாக பயணித்தாலோ கூட ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வேலை பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். 

இது தேசிய சுகாதார ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்  உடல் செயலற்ற தன்மையின் காரணமாக உருவாகும் தொற்றுநோய்க்கு இது பங்களிக்கும் வகையில் அமைந்திருக்கிறது  என்பதே உண்மையாகும்.

இப்படி நீண்ட காலம் உடல் பெரியளவில் செயலற்ற வகையில் இருப்பது மன அழுத்தத்துடன் அவர்களின் நரம்பு மண்டலங்களை மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறது. இந்த சூழல் அவர்களுடைய இரத்த அழுத்தத்தை அதிகரித்து அவர்களின் இதயங்களுக்கு பெரிய பாரத்தை உருவாக்குகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
 
மறைக்கப்பட்ட சுமைகள்: திட்டமிட்ட உணவுமுறை, வளர்சிதை மாற்றம் மற்றும் அமைதியான அபாயங்கள் சமீப காலமாகவே, பல இளம் இந்தியர்களின் உணவு உட்கொள்ளும் முறைகள் வெகுவாக மாறிவிட்டன. 

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை தங்கள் உணவில் பயன்படுத்துவது என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களில் கிட்டத்தட்ட 20% பேருக்கு உடல் பருமனாக இருக்கிறது.

இந்த எண்ணிக்கையானது இளைய தலைமுறையினரிடையே மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது  நம்முடைய ஆரோக்கிய அளவீடுகளில் வெறும்  ஒரு எண்ணைக் குறிப்பது  மட்டுமல்ல. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது. நம்முடைய உடலில் இருக்கும் தமனிகளில் ஆபத்தான படிமங்களை மிக வேகமாக உருவாக்கச் செய்கிறது.

உயர் இரத்த அழுத்தம் [Hypertension] என்பது அதிகம் வெளியே தெரியாமல் உள்ளேயே இருந்து நம்மைப் பாதிக்கும் மிகவும் ஆபத்தான ஒரு பிரச்சினை.  இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட  பெரியவர்களில் சுமார் 30% பேருக்கு  உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. ஆனால் இந்த பாதிப்பு உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக இளைய வயதினருக்கு, இது குறித்து தெரியாது என்பது கவலைக்குரிய விஷயமாகி இருக்கிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த சூழலானது, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை தாமதப்படுத்துவதோடு, கொஞ்சம் கூட வெளியே தெரியாமல் அவர்கள் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.  

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வைட்டமின் டி குறைபாடானது - மக்கள்தொகையில் 80% -க்கும் அதிகமானோரை பாதிக்கிறது. இதனால் அவர்களின் ரத்த குழாய்களின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வீக்கத்தையும் அதிகரிக்கிறது. இதன் தொடர்ச்சியாக இரத்த நாள செயல்பாட்டை பலவீனப்படுத்துவதால் அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.
 
வெளிகாட்டாமலேயே இருக்கும் அறிகுறிகள், அதி பயங்கரமான விளைவுகள்

அறிகுறிகளை வெளிக்காட்டாமலேயே இருப்பது ஆனால் அதன் பாதிப்பு துரிதமாக ஏற்படுவது போன்ற நிலைமையானது இது போன்ற பிரச்சினைகளை சவாலானவையாக மாற்றிவிடுகின்றன.

பல இளம்வயதுடைய நோயாளிகளுக்கு மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ளும்வரையிலும் கூட, அவர்களுக்கான அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியே தெரிவதில்லை.  இதுபோல் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியாத போது நாம் ஒரு நோய்க்கான அறிகுறிகளை மட்டுமே  நம்பியிருக்க முடியாது.

அப்படியானால் இது போன்ற சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? இந்த கேள்விக்கான பதில், ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து நாம் மேற்கொள்ளும் வழக்கமான பரிசோதனைகள்தான்.  குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் மேற்கொள்ளும் பரிசோதனைகளின் மூலம் இது போன்ற வெளித்தெரியாத பாதிப்புகளை நாம் கண்டறிய முடியும்.

ஒரு இளம் வயதுடைய நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படும் போது, ​​அதன் தாக்கம் மருத்துவமனை சிகிச்சைகளோடு முடிந்துவிடுவதில்லை. ஆனால் அதற்கு அப்பாலும் இயல்பு வாழ்க்கையில் அதன் பாதிப்பு நீண்டு கொண்டே செல்லும்.  

இதனால அவர்களின் குடும்பங்களும் எதிர்பாராத திடீர் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டவரின் தொழிலும் கூட அப்படியே ஏதோ ஒரு வகையில் ஸ்தம்பித்துவிடுகின்றன. இதன் தொடர்ச்சியாக பொருளாதார செலவுகள் மளமளவென அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றன.

இளம் வயதில் முன்கூட்டிய  உண்டாகும் இதய நோய் காரணமாக இந்தியாவுக்கு ஆண்டுதோறும் பில்லியன் மதிப்பிலான உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. உண்மையில் இது வெறும் மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல, மிக கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய சமூகப் பிரச்சினையும் கூட என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
 
சிகிச்சை முறைகளில் உண்டாகியிருக்கும் நவீன முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால சிகிச்சை பாதை அதிர்ஷ்டவசமாக, சிகிச்சை  முறைகளில் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளின் மூலம் பெரும் முன்னேற்றங்கள் இருந்து  வருகின்றன. 

இதில் ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளும் இருதய அறுவை சிகிச்சை பெரும் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றங்களில் ஒன்றாக இருக்கிறது. இது மிகவும் துல்லியமான, உடலில் குறைந்தபட்ச அறுவைசிகிச்சை ஊடுருவலுடன் மேற்கொள்ளும் வசதிகளும் வந்துவிட்டன.

 உலகளவில், ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளைப் பொறுத்தவரை உண்டாகும் சிக்கல்கள் வெகு குறைவு என்பதோடு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான மீண்டு வருவதும் துரிதமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.   இந்தியாவில், மிட்ரல் வால்வு பழுதுபார்ப்பு [mitral valve repair] மற்றும் கரோனரி பைபாஸ் [coronary bypass] போன்ற மிகவும் மருத்துவ நுட்பமான நடைமுறைகளை சிறிய கீறல்கள் மூலம் செய்ய அனுமதிக்கும் இந்த நவீன தொழில்நுட்பங்களால் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

இருப்பினும், இத்தகைய அதிநவீன மருத்துவப் பராமரிப்பு அம்சங்கள்  இதற்கு உண்டாகும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளின் காரணமாக, பெரும்பாலும் பெரிய நகரங்களில் மட்டும் எளிதில் பெறக்கூடியவையாக உள்ளன. இவை பரவலாக விரிவுபடுத்துவதற்கு போதிய பயிற்சி மற்றும் சுகாதார முதலீடு ஆகிய இரண்டு அம்சங்களையும் ஒருங்கிணைத்து செயல் படவேண்டியது அவசியமாகும்.   

இறுதியாக சொல்ல விரும்புவது, வரும்முன் காப்போம் என்பதே மிகச் சிறந்த பாதுகாப்பு. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தத்தை முறையாக நிர்வகித்தல் மற்றும் ஆபத்தான அறிகுறிகளுக்கும் காரணிகளுக்கும் ஆரம்பகால சிகிச்சை போன்றவையே நம் உடல்நிலையில்  நல்ல மாற்றங்களை உருவாக்கும்.

இதயம் என்பது ஒரு நம்முடைய உடல் உறுப்பு என்பதையெல்லாம் விட மிக மேலானது. காரணம் ஒரு இளம் வயதுடைய ஆணோ அல்லது பெண்ணோ அவர் காணும் கனவுகளுக்கு  அடிப்படையாக இருப்பது, உயிர்ப்புடன் வைத்திருப்பது அவரது ஆரோக்கியமான இதயமே. அதைப் பாதுகாப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல; அவசியமானது, உடனடியாக மேற்கொள்ள வேண்டியது.

இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது