கட்டில் பழக்கம் !



சரோஜாதேவி பதில்கள்

* ஏன் முதல் இரவு? முதல் பகலாக இருந்தால் இன்னும் ஜோராக இருக்குமே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
முதன்முதலாக சில விஷயங்களைக் காணும்போது இலைமறை
காய்மறையாய் இருட்டில் பார்ப்பதே உங்கள் கிட்னிக்கு நல்லது.

* மலராடையில் காதலியைப் பார்க்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
பார்க்க மட்டும் செய்யலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டால் மலர்கள் கசங்கிடுமே?

* பழங்களிலே மிகவும் சுவையானது எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
முக்கனிகளான மா, பலா, வாழை. இந்தக் கேள்வியில் டபுள் மீனிங் எதுவுமில்லையே?

* தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. கட்டில் பழக்கம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.கை, கால் விளங்கும்வரை.

* பெண்களின் சிணுங்கல், என் காதில் தேனாய் பாய்கிறதே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா அர்ஷத்?