தோழியருக்கான நட்சத்திர பலன்கள் (ஜனவரி 16 முதல் 31 வரை)



ஜோதிடமணி வசந்தா சுேரஷ்குமார்

1. அசுவினி: விவேகமான தன்மை கொண்ட சுறுசுறுப்பின் சொந்தக்காரிகளான உங்களின் ஆதிக்க நாயகன் கேது பகவான் உச்சமாய் சஞ்சாரம். எனவே இப்புத்தாண்டு மகிழ்வூட்டும் ஆண்டாய் மலர இருக்கின்றது. 10-ல் குரு, சனியும் நீச்ச பங்க ராஜயோகமாயும், 2, 4, 6-ம் வீட்டை பார்வையிடுவதாலும் குருவினால் நல்ல பலன்கள் சனியினாலும் அபரிமிதமான பலன்கள் கூடிவரும். எனவே தொழில் வளம் சிறக்கும். கணிசமான லாபங்கள் கைக்கு வந்து சேரும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த துன்பங்கள் தீரும். தேகம் பளிச்சிடும். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். வாகனங்களை மாற்றி புதிதாய் அமைப்பீர்கள். உத்தியோக உயர்வு கிட்டும். தடைபட்டு வந்த திருமணங்கள் கூடுவதால் இல்லம் மகிழ்வாகும். இன்பம் தேடி வந்து இல்லத்தை மகிழ்விக்கும் இனிய நேரம். செவ்வாய் அன்று விநாயகர் அகவல் படித்தால் வெற்றி வந்து சேரும்.

2. பரணி: எடுத்த செயல்கள் யாவையும் வெற்றிகரமாய் செய்து முடிக்கும் அபாரமான திறமை கொண்ட விநாயகப் பெருமானின் அருளைப்பெற்ற தங்களுக்கு இப்புத்தாண்டு இன்பம் தரும் ஆண்டாக அமைய உள்ளது. 10-ல் குரு பகவான் நீச்சம் பெற்றும், சனிபகவான் ஆட்சியாய் 10-ம் வீட்டிலும் நீச்ச பங்க ராஜயோகமாய் சஞ்சாரம். எனவே தொழில் சிறப்பாகும். குருவின் பார்வை 2, 4, 6-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வீடு வாங்க எண்ணம் தோன்றும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உத்தியோக முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். இல்லறம் நல்லறமாய் மகிழ்வு தரும் இன்பகரமான மாதமிது. செவ்வாய் அன்று ஷண்முக கவசம் பாராயணம் செய்ய சந்தோஷம் தேடி வரும்.

3. கிருத்திகை: கனிவான பேச்சுத் திறமையும், எச்செயலையும் எளிதில் வெற்றிகரமாய் செய்து முடிக்கும் சூரியனின் அனுக்கிரகம் அமையப்பெற்ற திறமைசாலிப் பெண்மணிகளான நீங்கள் உள்ளம் பூரிக்கும் புத்தாண்டாய் இவ்வாண்டு உங்களை வரவேற்கின்றது. 1-ம் பாதம் மேஷ ராசிக்கு 10-ல் குரு, சனி 1, 3, 4-ம் பாதங்கள் ரிஷப ராசிக்கு 9-ல் குருவும், சனியும் எனவே பிதுர்ஸ்தானத்தில் சஞ்சாரம். எனவே பிறந்த வீட்டின் மூலம் பழைய சொத்துக்கள் வரக்கூடும். குடும்பப் பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியம் மேன்மையாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் கிட்டும். மேலதிகாரிகளின் அன்பு கிட்டும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். கணவன், மனைவி உறவில் அன்பு மலரும் நல்ல தருணமிது. ஞாயிறு அன்று சூரியன் துதியை பாராயணம் செய்ய சுபிட்சம் உண்டாகும்.

4. ரோகிணி: அன்பிற்கு மட்டுமே அடிபணியும் சுபாவம் கொண்ட சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களான நீங்கள் மகிழ்வு அடையும் வண்ணம் இவ்வாண்டு பெருமையுடன் மலர்வதற்கு இருக்கின்றது. 9-ல் குரு, சனியும், குரு நீச்ச பங்க ராஜயோகமாய் குரு சந்திர யோகமாயும் சஞ்சாரம். எனவே தேகம் பளிச்சிடும். மனதில் புதுவித தெம்பும், தைரியமும், உற்சாகமும் வந்து சேரும். பணவரவில் முன்னேற்றமான நிலை தென்படும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சகோதரர்களால் நன்மை அடைவீர்கள். தெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலரின் நீண்டநாட்களாய் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். தாம்பத்திய வாழ்க்கையில் தனி இன்பங்கள் வந்து சேரும் மாதமிது. திங்கட்கிழமை கிருஷ்ணரை வணங்க வாழ்வில் நல்ல திருப்பங்கள் வரும்.

5. மிருகசீரிடம்: உயர்ந்த எண்ணங்கள் கொண்ட பண்பான பெண்மணிகளான செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைக்கப்போகும் ஆண்டாய் அமைய உள்ளது. 1, 2-ம் பாதம் ரிஷப ராசிக்கு 1, 3, 5-ம் வீட்டை குரு பார்வையிடுவதும், 3, 4-ம் பாதம் மிதுன ராசிக்கு 8-ம் வீட்டில் குரு, சனி சஞ்சாரம். எனவே எண்ணற்ற சோதனைகளை சந்தித்த உங்களுக்கு நல்ல நேரமாய் அமையும். மிதுன ராசியினர் சற்றே கவனத்துடன் வாய் வார்த்தைகளில் கவனம் தேவை. எக்காரியத்தையும் யோசித்து செயலாற்ற நன்மை கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமைகள் கூடும். சோர்வும் வந்து சேரும். இல்வாழ்க்கை ஓர் நல்ல வாழ்க்கையாய் திருப்பம் தரும் நேரம். செவ்வாய் அன்று கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய கவலைகள் தீரும்.

6. திருவாதிரை: நல்ல நோக்கங்களும், சீரிய எண்ணங்களால் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடிக்கும் ராகுபகவானின் அருள் அமையப்பெற்ற யோகக்காரப்பெண்மணிகளான உங்களின் எண்ணம் செயலாகும் ஆண்டாய் இவ்வாண்டு உங்களை வரவேற்கின்றது. 8-ல் குரு, சனி, சஞ்சாரம் குருபகவான் 2, 4, 12-ம் வீட்டை பார்வையிடுகின்றார். எனவே தேகநலனில் அக்கறை தேவை. தனவரவில் தடையிராது. இருப்பினும் தொழிலில் கவனமாய் செயல்படுதல் நன்று. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் ஒற்றுமை மேலோங்கும். சுப விரையங்கள் ஏற்படும். தடையான திருமணம் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமைகள் கூடுதலாகும். எனவே உடல் சோர்வும் உண்டு. பொறுமை தேவை. கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தருணம். ஞாயிறு அன்று காளியம்மன் கவசம் பாராயணம் செய்ய காரிய வெற்றியாகும்.

7. புனர்பூசம்: அனைவரிடமும் இயல்பாய் பழகும் தனித்திறமை கொண்ட குருபகவானின் ஆதிக்கம் அமையப்பெற்ற தங்களின் நீண்டநாளைய கனவுகள் செயல்வடிவம் பெறும் ஓர் நல்ல புத்தாண்டாய் அமைய உள்ளது. 1, 2, 3-ம் பாதம் மிதுன ராசிக்கு 8-ல் குருவும், சனியும் 4-ம் பாதம் கடக ராசிக்கு நேர் 7-ம் வீட்டில் குருவும், சனியும் சஞ்சரிக்கின்றனர். எனவே தேக ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். கல்வி பயில்பவர்கட்கு சுறுசுறுப்பு தேவை. தனவரவில் இருந்துவந்த இழுபறியான நிலை மாறி தாய் வீட்டின் மூலம் ஓர் தொகை கைக்கு வந்து சேரும். புதிய வீட்டிற்கு சிலர் மாற்றம் செய்யும் நேரமும் உண்டு. கடன் சுமைகள் குறையும். சிலர் புதிய வேலை மாறுவர். கணவன், மனைவியிடையே இருந்து வந்த மனவேற்றுமைகள் விலகி ஓடும். வியாழக்கிழமை சீரடி சாய்பாபாவின் தரிசனம் விருப்பங்கள் நிறைவேறும்.

8. பூசம்: உயர்வான பண்பு நலம் மிக்க தன்மையான பெண்மணிகளான சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களின் உள்ளம் குளிரும் நற்செய்திகள் வந்து அசத்தப்போகும் ஓர் புத்தாண்டாய் இவ்வாண்டு மலர்கின்றது. குரு, சனியும் நேர் பார்வையாய் குரு சந்திரயோகம், நீச்ச பங்க ராஜ யோகம் என உங்களின் பாடு யோகந்தான் போங்கள். எனவே தேகமும், முகமும் வசீகரமாகும். பணவரவிற்கு புதிய தொழில் தொடங்கும் யோசனைகள் தோன்றும். சகோதரிகளின் மூலம் ஆதரவு கிட்டும். தந்தையினால் மனம் மகிழும் நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினரின் பாராட்டுதல் கிட்டும். சிலருக்கு புத்திரப்பாக்யம் அமையும். மகான்களின் ஆசி கிட்டும். கணவன், மனைவியிடையே புரிதல் உண்டாகும் ஓர் நல்ல மாதமிது. சனிக்கிழமையன்று உடல் ஊனமுற்றோருக்கு உதவ சலனங்கள் தீரும்.

9. ஆயில்யம்: சாதனைகள் புரிவதில் அதிக ஆர்வம் கொண்ட கெட்டிக்காரப் பெண்மணிகளான புதனின் ஆதிக்கம் அமையப்பெற்றுள்ள உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் ஓர் புத்தாண்டாய் மலர உள்ளது. குரு, சனி, சூரியன், புதன் என குருவின் நேர்பார்வையால் குருச்சந்திர யோகம், நீச்சபங்க ராஜ யோகமாய் சஞ்சாரம். எனவே உங்களின் காட்டில் பணமழைதான். தேகத்தில் மலர்ச்சியும், தெளிவும் உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கைகள் வந்து சேரும். உத்தியோகத்துறையினர்கட்கு பதவி உயர்வு, சம்பள விகிதம் கூடும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். உறவினர்கள் வருகையினால் வீடே கலகலப்பாகக் கூடும். தாம்பத்திய வாழ்வில் தனியான வசந்தம் வந்து வீசும் நேரமிது. புதன்கிழமை நாகர்
கோயிலுக்கு பால்விட்டு பூஜிக்க நன்மை உண்டு.

10. மகம்: விவேகமான செயல்திறமையும், மதிநுட்பத்துடன் செயல்புரிந்து வெற்றி வாகை சூடும் கேதுவின் ஆதிக்கம் பெற்ற செயல்ராணிகளான உங்கள் உள்ளம் மகிழ்வடையும் புத்தாண்டாய் மலர உள்ளது. 6-ல் குருவும், சனியும், சூரியன், புதனும் என கிரக நிலையில் குருபகவான் 2, 10, 12-ம் வீட்டை பார்வையிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் தெளிவான நிலை உண்டாகும். இல்லத்தில் பண வரவு கூடுதலாகும். சிலருக்கு 6-ல் சனியால் மிகப்பெரிய நன்மைகள் வந்து சேரும். பகைவர்கள் நண்பர்களாய் மாறுவர். புதிய வீட்டிற்கு மாற்றம் சிலர் செய்வர். வாகன யோகமும் உண்டு. உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். கணவன், மனைவி உறவு கற்கண்டாய் இனிக்கும் நல்ல ஆண்டிது. ஞாயிறு அன்று சூரியன் பாடல்கள் பாராயணம் செய்ய சுகம் உண்டாகும்.

11. பூரம்: சுயமுயற்சியினால் வாழ்க்கையில் உயர்நிலையை எட்டிப்பிடிக்கும் விவேகிகளான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த பெண்மணிகளான தங்களின் மனம் மகிழும் ஓர் இனிய புத்தாண்டாய் அமைய இருக்கின்றது. 6-ல் சூரியன், புதன், குரு, சனி என கிரக சஞ்சாரம் இருப்பினும், தனம், தொழில், விரையம் என்னும் வீட்டை குருபகவான் பார்வையிடுவதால் தேகநலம் சுபிட்சமாகும். தனவரவினில் இருந்த தடைகள் நீங்க சரளமான பணவரவிற்கு வழிகள் புலனாகும். சகோதரிகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். விருந்து உபசாரங்களில் கலந்துகொள்வீர்கள். தெய்வப்பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். கணவரின் அன்பைக் கண்டு அகம் குளிரும் அற்புதத் தருணமிது. வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதி பாராயணம் செய்ய வெற்றி உண்டாகும்.

12. உத்திரம்: எதையும் வெளிப்படையாயப் பேசும் தனித்திறமையும், பிறர் நலனில் அக்கறை காட்டும் சூரியனின் ஆதிக்கம் அமையப்பெற்ற தியாகிகளான உங்களின் எண்ணங்கள் செயலாகும் ஓர் இன்பகரமான புத்தாண்டாய் அமைய உள்ளது. 1-ம் பாதம் சிம்ம ராசிக்கு 6-ல் குரு, சனி சஞ்சாரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசிக்கு 5-ல் குரு, சனி, சூரியன், புதன் என குரு சந்திர யோகமாயும், நீச்சபங்க ராஜ யோகமாய் சஞ்சரிப்பதால் தேகம் பளிச்சிடும். பணவரவு இரட்டிப்பாகும். மனதில் புதுவிதமான தெம்பும், உற்சாகமும் வந்து சேரும். உத்தியோக முயற்சியில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். தெய்வ பலம் கிட்டும். கணவருக்கு உத்தியோக மேன்மை வந்து சேரும். குடும்ப ஒற்றுமை கண்டு உள்ளம் பூரிக்கும் இனிய நேரமிது. ஞாயிறு அன்று சூரிய பகவான் தரிசனம் சுபிட்சம் அளிக்கும்.

13. அஸ்தம்: கடமை செய்வதையே கண்ணாய் நின்று செயல்படுத்தும் விவேகிகளான சந்திரனின் ஆதிக்கம் அமையப்பெற்ற உங்களின் ஏக்கங்கள் தீரும் ஓர் நல்ல ஆண்டாய் இப்புத்தாண்டு அமைய இருக்கின்றது. 5-ல் குருவும், சனியும், சூரியன், புதன் எனவும் குரு சந்திர யோகமாயும், நீச்ச பங்க ராஜ யோகமாயும் 9, 11 என குருவின் பார்வையாலும் நினைத்த செயல்கள் அனைத்தும் வெற்றியாகும். உடல்நலத்தில் மலர்ச்சி உண்டாகும். செய்தொழிலில் பொருளாதார நிலை உயரும். சிலர் புதிய வங்கிக்கணக்கைத் தொடங்குவர். புதிய வீடு, வாகனம் என சொத்துக்கள் சேரும். சிலரின் தடைபட்டு வந்த திருமணம் கூடிவரும். இல்வாழ்வில் இனிமை வந்து எட்டிப்பார்க்கும் பொன்னான நேரம். திங்கட்கிழமை சிவபுராணம் பாராயணம் செய்ய சிறப்புக்கள் வந்து சேரும்.

14. சித்திரை: அறிவாற்றல் அதிகமும், பேச்சுத்திறமையும் அமையப்பெற்ற செவ்வாய் பகவான் ஆதிக்கம் அமைந்துள்ள விவேகிகளான தங்கள் மனம் மகிழும் வண்ணம் இப்புத்தாண்டு மலர்வதற்கு உள்ளது. 1, 2-ம் பாதம் கன்னி ராசிக்கு 5-ல் குரு, சனி 3, 4-ம் பாதம் துலா ராசிக்கு 4-ல் குரு, சனி, (அர்த்தாஷ்டமச்சனி) என சஞ்சாரம். எனவே எச்செயல் ஆரம்பம் செய்யும்போது யோசித்து செயல்பட நன்று. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பொருளாதார நிலை உயர முயற்சிகள் மேற்கொள்ள யோசனைகள் தோன்றும். பெற்றோர்களின் ஆதரவும், அன்பும் உங்களை மகிழ்வடையச் செய்யும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் கூடுதலாகி பணிச்சுமைகள் கூடும். கணவன், மனைவியிடையே வெறுப்புக்கள் நீங்கி விருப்பம் கூடுதலாகும். செவ்வாய் அன்று திருப்புகழ் பாராயணம் வாழ்வில் திருப்பங்கள் வரும்.

15. சுவாதி: செய்யும் செயலை வெற்றிகரமாய் செய்து முடிக்கும் மதிநலம் மிக்க காளியின் அனுக்கிரகம் பெற்றுள்ள தங்கள் தடைபட்டு வந்த செயல்கள் யாவும் வெற்றி வாகை சூடும் புத்தாண்டாய் அமைய உள்ளது. 4-ல் சூரியன், புதன், குரு, சனி என கிரக சஞ்சாரம். குருவின் பார்வை 8, 10, 12-ம் வீட்டைப்பார்ப்பதும், அர்த்தாஷ்டமச்சனியாய் சஞ்சாரம். எனவே எடுத்த முயற்சி யாவும் பலனளிக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள்.
உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். பெற்றோர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் உதயமாகும். புதிய நட்பைத் தவிர்த்தல் நன்று. பணியிட மாற்றம் சிலருக்கு வரலாம். கல்வி பயிலும் மாணவிகட்கு அயல்நாடு சென்று பயில அழைப்பு வரும். தம்பதிகள் இருவரும் மனம் ஒன்றி பரஸ்பர அன்பு காட்டும் நேரமிது. ஞாயிறு அன்று கருட பகவான் தரிசனம் செய்ய கவலைகள் தீரும்.

16. விசாகம்: தெளிவான தொலைநோக்குப் பார்வையும், குருபகவானின் ஆதிக்கம் பெற்றுள்ள உங்களை சந்தோஷப்படுத்தும் வண்ணம் நற்செய்திகள் வந்து சேரும் ஓரு நல்ல ஆண்டாக புத்தாண்டு அமைய உள்ளது. 1, 2, 3-ம் பாதம் துலா ராசிக்கு 4-ல் சூரியன், புதன், குரு, சனி என சஞ்சாரம். 4-ம் பாதம் விருச்சிக ராசிக்கு 3-ல் குருவும், சனியும் என கிரக நிலைகள் அமைந்துள்ளதால் இனிவரும் எதிலும் யோசித்து செயலாற்றுதல் வெற்றியைத்தரும். தேகம் பளிச்சிடும். பணவரவில் முன்னேற்றம் காண்பீர்கள். தடைபட்டு உத்தியோக வாய்ப்பு கைக்கு வந்து சேரும். கடன் சுமைகள் தீரும். சிலருக்கு மகப்பேறு கிட்டும் யோகமுண்டு. குடும்ப ஒற்றுமையினால் தம்பதிகள் உள்ளம் பூரிக்கும் நேரமிது. வியாழக்கிழமை குரு கவசம் பாராயணம் செய்ய குடும்பம் சுபிட்சமாகும்.

17. அனுஷம்: கடமையில் கண்ணாய் நின்று செயல்புரியும் விவேகிகளான செவ்வாய் ஆதிக்கம் பெற்ற வெற்றி ராணிகளான உங்களின் உள்ளம் குளிரும் வண்ணம் பரிசுகள், பாராட்டுக்கள் உங்களை மகிழ்விக்கும் வண்ணம் இப்புத்தாண்டு அமைய இருக்கின்றது. 3-ல் சூரியன், புதன், குரு, சனி என கிரக சஞ்சாரம். சுமார் 8 ஆண்டுகளாய் சஞ்சாரம் செய்த சனிபகவான் தனுர் ராசியிலிருந்து, மகரத்திற்கு ஆட்சியாய் நீச்சபங்க ராஜ யோகமாய் சஞ்சாரம். எனவே தொட்டது துலங்கும். கேட்டது கிடைக்கும் நேரம். வீடு தேடி நற்செய்திகள் வரும். பல பிரச்னைகள் தீரும். மனம் தெளிவாகும். தனவரவு கூடும். தாய் வீடால் நன்மை கிட்டும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் சேரும். கணவன், மனைவியிடையே வெறுப்புக்கள் மறைந்து விருப்பம் கூடும். செவ்வாய் அன்று கந்த குரு கவசம் பாராயணம் செய்ய வளம் சேரும்.

18. கேட்டை: எப்போதும் பிறர் நலனில் அக்கறை காட்டும் தியாக உள்ளம் கொண்ட புதபகவானின் ஆதிக்கம் பெற்ற தங்களை மகிழ்விக்கும் வண்ணம் இப்புத்தாண்டு உங்களை இன்ப வெள்ளத்தில் மிதக்க வைக்கும் ஆண்டாய் மலர உள்ளது. 3-ல் சூரியன், புதன், குரு, சனி என கிரக நிலை ஏழரையாண்டுச்சனி விலகி நற்பலன்கள் தரும் ஒரு பொன்னான நேரமாய் நல்ல செய்திகள் வீடு தேடி வந்து உங்களை மகிழ்விக்கும். உடல் தெளிவடையும். பணவரவில் முன்னேற்றம் வரும். இல்லத்தில் சுபமங்கள நிகழ்வுகள் கூடிவரும். உறவினர்களின் வரவால் வீடே கலகலப்பாகும். பிரிந்த உறவுகள் சேரும் நேரம். தாய் வீட்டினரின் ஆதரவினால் மக்களின் கல்வி முன்னேற்றம் அமையும். குடும்ப ஒற்றுமையினால் தம்பதிகள் உள்ளம் பூரிக்கும் தருணமிது. புதன்கிழமை நரசிம்மரை தரிசிக்க எதிரிகள் விலகி ஓடுவர்.

19.மூலம்: தைரியத்துடன் செயல்படும் மனோ தைரியம் மிகுந்த கண்டிப்பான தன்மை கொண்ட ஆஞ்சநேயரின் ஆதிக்கம் பெற்ற திறமைசாலிப் பெண்மணி களான தங்கள் உள்ளம் மகிழும் புத்தாண்டாய் அமைவதற்கு உள்ளது. 2-ல் சூரியன், புதன், குரு, சனி, பாதச்சனியாய் சஞ்சாரம், குருவின் பார்வை 6, 8, 10-ம் வீட்டைப் பார்ப்பதால் செய்தொழில் எதுவாயினும் நல்ல லாபம் கிடைக்கும். தேகம் மின்னும். மனம் லேசாகும். தாய் வீட்டின் மூலம் நன்மைகள் வந்து சேரும். குடும்பப்பிரச்னைகள் மறையும். பழைய வீட்டை மாற்றி புதிய வீட்டிற்கு குடிபோவர். சிலருக்கு மகப்பேறு கிட்டும். பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புக்கள், அதன் பொருட்டு மதிப்பு உயரும். தாம்பத்திய வாழ்வில் இன்பம் கூடும் இனிமையான நல்ல நேரமிது. சனிக்கிழமை நவநாயகர்கள் துதி பாராயணம் செய்ய நன்மைகள் கிட்டும்.

20. பூராடம்: தன்னலம் கருதாமல் பிறர் நலனுக்காக வாழும் தியாகப் பெண்மணிகளான சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற பண்பான பெண்மணி
களான உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த இப்புத்தாண்டு அமைய உள்ளது. 2-ல் குரு நீச்சம், 2-ல் சனி ஆட்சி, பாதச்சனியாய் சஞ்சாரம். எனவே தேக நிலை ஆரோக்கியமாகும். பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களால் ஆதரவு கிட்டும். மகான்களின் ஆசி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இல்லத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். கடன்கள் தீரும். கணவரின் உத்தியோக உயர்வால் மகிழ்வீர்கள். சிலர் புதிய வங்கிக்கணக்கை ஆரம்பம் செய்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகமுண்டு. கணவரின் அன்பால் நெஞ்சம் நெகிழ்ந்துபோகும் இனிமையான நேரம். வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்ய வெற்றிகள் வந்து சேரும்.

21. உத்திராடம்: பொறுப்புடன் எச்செயலையும் வேகமாய் செய்து முடிக்கும் பொறுப்பான பெண்மணிகளான சூரியனின் ஆதிக்கம் பெற்ற தங்களின் உள்ளம் பூரிக்கும் வண்ணம் இப்புத்தாண்டு வரவேற்க உள்ளது. உத்திராடம் 1-ம் பாதம் தனுர் ராசிக்கு 2-ல் குரு, சனியும் சஞ்சாரம். 2, 3, 4-ம் பாதம் மகர ராசிக்கு ஜென்மத்தில் சனியும், குருவும் நீச்ச பங்க ராஜ யோகமாயும் 5, 7, 9-ம் வீட்டை குரு பார்வையிடுவது என சஞ்சாரம். எனவே பொருளாதார நிலையில் திருப்தி கிடைக்கும். எதிரிகள் தலை குனிவர். பிரிந்த தாய்வழிகள் ஒன்று சேரும் நேரம். ஆரோக்கிய நிலை தெளிவாகும். உங்களின் வாக்குவன்மையால் பல காரியங்களை திறமையாய்ச் செய்து முடிப்பீர்கள். வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை வந்து சேரும். ஞாயிறு அன்று ஆதித்யஹ்ருதயம் வாசிக்க ஆற்றல்கள் அதிகரிக்கும்.

22. திருவோணம்: தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதும் தியாக மனப்பான்மை கொண்ட சந்திரன் ஆதிக்கம் பெற்ற தங்களின் உள்ளம் மகிழும்படியான நற்செய்திகள் வந்து சேரும் ஓரு நல்ல புத்தாண்டாய் இவ்வாண்டு உங்களை வரவேற்க உள்ளது. ராசியில் சூரியன், புதன், குரு, சனி என சஞ்சாரம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம், நீச்ச பங்க ராஜ யோகமாய் சஞ்சரிப்பதாலும், ஏழரையாண்டுச்சனி ஜென்மச்சனியாய் உள்ளதால் எத்தொழிலும் ஆரம்பம் செய்யும் நேரம் நிதானம் தேவை.  பணமுடை தீரும். எதிரிகள் பலம் குறையும். நட்பு வட்டம் மூலம் நன்மைகள் கிட்டும். புதிய சொத்துக்கள் வந்து சேரும். தம்பதிகள் இருவரும் மனம் விட்டுப் பேசி மகிழும் அற்புதமான நேரம். திங்கட்கிழமை வேங்கடவன் தரிசனம் செய்ய வேண்டுதல் நிறைவேறும்.

23. அவிட்டம்: இனிமையான பேச்சுத்திறமை உள்ளவர்களும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் கொண்ட செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற தங்களை இப்புத்தாண்டு இன்பமுடன் வரவேற்கின்றது. அவிட்டம் 1, 2-ம் பாதம் மகர ராசிக்கு ராசியில் குரு, சனி, சூரியன், புதன், 3, 4-ம் பாதம் கும்ப ராசிக்கு 12-ல் சூரியன், புதன், குரு, சனி என சஞ்சாரம். எனவே ஏழரையாண்டுச்சனி ஆரம்பம். எனவே எச்செயலிலும் நிதானம் தேவை. புதிய முயற்சிகள் ஆரம்பம் செய்வதை தள்ளிப்போடுதல் நன்று. வீடு, நிலம் என அமைய தாய் வீட்டினர் ஆதரவுக்கரம் நீட்டுவர். தெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் வீடு மாற்றம் செய்வர். இல்வாழ்வில் இன்பம் வந்து எட்டிப்பார்க்கும் இனிமையான நேரம். செவ்வாய் அன்று கந்த அனுபூதியை பாராயணம் செய்ய கவலைகள் தீரும்.

24. சதயம்: அறிவாற்றல் அதிகமும், கற்பனை வளமும் கொண்ட காளியின் அனுக்கிரகம் அமையப்பெற்ற கெட்டிக்காரப் பெண்மணிகளான தங்களின் உள்ளம் குளிரும் ஓர் இனிய புத்தாண்டாய் இவ்வாண்டு மலர உள்ளது. 12-ல் குரு, சனி, சூரியன், புதன் என கிரக சஞ்சாரம். எனவே 4, 6, 8-ல் குரு பார்வையுடன் ஏழரைச்சனியும் ஆரம்பம். எனவே எதிலும் பொறுமையும், நிதானமும், வாய்வார்த்தைகளில் கவனமும் தேவை. தேக ஆரோக்கியத்தில் எப்போதும் விழிப்புடன் இருத்தல் நலம். பணவரவில் தடைகள் வரலாம். எனவே கடும் உழைப்பால் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமைகள் கூடுதலாகி, உடல் சோர்வாகும். தெய்வ பக்தியால் சரியாகும். கணவன், மனைவி இருவரிடையே இருந்து வந்த மனத்தாக்கம் மறையும் நேரம். ஞாயிறு அன்று துர்க்கையம்மனை பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகும்.

25. பூரட்டாதி:  எவரிடமும் நேருக்கு நேர் நின்று உண்மையுடன் பேசும் மனோ தைரியம் கொண்ட குருபகவானின் அனுக்கிரகம் பெற்ற தங்களைப் பாராட்டும் வண்ணம் பெருமை பெறும் ஆண்டாய் மலர இருக்கின்றது. 1, 2, 3-ம் பாதம் கும்ப ராசிக்கு 12-ல் சூரியன், புதன், குரு, சனி என சஞ்சாரம்.
4-ம் பாதம் மீன ராசிக்கு 11-ல் சூரியன், புதன், குரு, சனி என்று சஞ்சாரம். எனவே பொருளாதார நிலையில் உயர்வான எண்ணங்கள் தோன்றும்படி நிதிநிலை உயரும். தேக ஆரோக்கிய நிலையில் மலர்ச்சி ஏற்படும். சகோதரிகள் மூலம் நெருக்கடி நிலை தீரும். விருந்தில் கலந்துகொள்வீர்கள். உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு பணியிட மாற்றம் வரலாம். திருமண வாழ்வில் திருப்பங்கள் வந்து சேரும் ஓரு நல்ல நேரமிது. திருவல்லிக்கேணி ராகவேந்திரர் தரிசனம் செய்ய திருப்பங்கள் வரும்.

26. உத்திரட்டாதி: தெளிவான தொலைேநாக்குப் பார்வையும், பிறர் மனதைப் புரிந்து செயல்படும் தன்மையும் சனிபகவானின் அனுக்கிரகம் பெற்ற உங்களை மகிழ்விக்கும் ஆண்டாய் இவ்வாண்டு அமைய உள்ளது. 11-ல் சூரியன், புதன், குரு, சனி எனவும் 2-ல் செவ்வாய் ஆட்சியாயும், 3, 5, 7-ம் வீட்டை குரு பார்வை, 11-ல் சனி எனவே உங்களின் எண்ணம் செயலாகும் பொன்னான நேரம். நிதிநிலை உயரும். குடும்பம் ஒற்றுமையாகும்படி சுபநிகழ்வுகள் கூடிவரும். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். தெய்வ பலத்தால் எதையும் சாதித்துக்காட்டுவீர்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். கடன்சுமைகள் தீரும். மகப்பேறு கிட்டும் யோகம் சிலருக்கு உண்டு. தம்பதிகள் உள்ளம் பூரிக்கும் இன்பகரமான நன்மைகள் வந்து சேரும் மாதம். சனிக்கிழமையன்று பார்வையற்றவர்கட்கு உதவிட பாவங்கள் தொலையும்.

27. ரேவதி:  இனிமையான பேச்சுத்திறன் உள்ளவர்களும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உள்ள புதன் ஆதிக்கம் பெற்ற தன்மையான பெண்மணிகளான உங்களை மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வைக்கும் புத்தாண்டாய் இவ்வாண்டு தங்களை வரவேற்கின்றது. 11-ல் சூரியன், புதன், குரு, சனி என கிரக சஞ்சாரத்துடன் 3, 5, 7 என குருவின் பார்வையுடன் கிரக பலமாய் சஞ்சரிப்பதால் தொழிலில் கணிசமான ஓரு தொகை கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வீடு தேடி வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தடைபட்டு வந்த திருமணம் கூடி வருவதும் உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலவும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வந்து சேரும். வீடு, வாகனம் என சொத்துக்கள்் சேரும். இல்வாழ்க்கையில் இன்பம் வந்து எட்டிப்பார்க்கும் இனிய நேரம். புதன்கிழமையன்று பூவராக சுவாமியை தரிசிக்க புகழ் வந்து சேரும்.