சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோல்



வாசகர் பகுதி

*உலர்ந்த ஆரஞ்சுப் பழத்தோலின் புகைக்கு கொசுவை விரட்டும் சக்தி உள்ளது.

*ஆரஞ்சுப் பழத்தோலைப் பொடியாக்கி ரசத்துடன் சேர்த்துப் பாருங்கள் மணமும், சுவையும் கூடும்.

*ஆரஞ்சுப் பழத்தோலின் அடியில் படர்ந்திருக்கும் வெள்ளை நூல் போன்ற வஸ்துவை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் ½ லிட்டர் தண்ணீர் விட்டு 1 பழத்தோலை அரை மணி நேரம் வேக வைத்து பின் அந்த நீரைத் தனியாக எடுத்து வாய் கொப்பளிக்க, முகம் கழுவ வைத்துக்கொள்ளலாம். இது வாய், முகங்களிலிருந்து கிருமிகளை நீக்கும்.

*ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்தி, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், சிறிது பாதாம் பருப்பு சேர்த்து பொடியாக்கி, பன்னீருடன் முகத்தில் பூசிக்கொள்ள மிருதுவாக, பளபளப்பாக முகம் மாறும்.

*வேக வைத்த 1 ஆரஞ்சுப் பழத்தோலை ஒரு பாத்திரத்தில் பனங்கருப்பட்டி (அ) பனங்கற்கண்டில் ½ மணி நேரம் வேக வைத்து எடுத்து உலர்ந்தபின், அந்த முழுத்தோலையும் ஒரு வேளைக்கு சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஜீரணத்திற்குத் தேவையான பித்த நீர் சுரக்க உதவும்.

- பி.தீபா, ஓசூர்.

உடலை பேணிக்காக்கும் வேர்க்கடலை

*வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது.

*இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

*இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

*இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

*இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது.

*நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது.

*பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.

*இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும்
தடுக்கப்படுகிறது.

*விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி
உதிர்வதையும் தடுக்கிறது.

*இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை.