வாசகர் பகுதி



சருமம் பளபளக்க பாலாடை

* வெயிலினால் வியர்த்து நீரினில் நனைந்து போகும் சருமமானது மழைக்காலத்தில் கடுங்குளிரால் வறண்டு காணப்படும்.

* இதைத் தடுக்க தினமும் காலையும், மாலையும் நல்ல மாய்ச்ரைஸர் லோஷன் உபயோகப்படுத்தலாம்.

* தரமான மாய்ச்ரைஸர் லோஷனை தேர்வு செய்வதன் மூலம் குளிரிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து அழகாக இருக்கலாம்.

* நமது சருமம் அதிகம் வறண்டு போகக்காரணம் உடலிலே தேவையான நீர்ச்சத்து இல்லாமல் போவதே.

* ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவினை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்திற்கு பேக் போடலாம். இதனால்
சருமம் வறண்டு போகாமல், நீர்த்தன்மையை இழக்காமல் பாதுகாக்கும்.

* முட்டை வெள்ளைக்கருவுடன், பாதாம் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பாலாடை இவைகளைக் கலந்தும் பேக் போட்டு வந்தால், சருமத்திற்குப் பொலிவு கிடைக்கும்.

* உடலில் சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடலின் அயர்வு நீங்கி ரத்த ஓட்டம் சீராக இருக்கும். புத்துணர்வும் கிடைக்கும்.

* உதடுகள் வறட்சியினால் வெடித்துப்போகும். இதைத்தடுக்க தினமும் உதடுகளில் வாசலினை தடவிக் கொள்ளலாம்.

* பொதுவாக சருமம் பொலிவுடன் விளங்க நாம் உட்கொள்ளும் உணவிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், மோர் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் கலந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.

* தினமும் சோப்பு உபயோகிப்பதைத் தவிர்த்து வேல் வாழை உபயோகிக்கலாம். இதனால் சருமத்திற்கு மிருது தன்மையும், இயற்கையான எண்ணெய்ப்
பசையும் கிடைக்கும்.

* மழைக் காலங்களில் பாத வெடிப்பு வராமல் இருக்க வாரம் ஒரு முறை நீரில் எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு சிறிது உப்பு, தரமான ஷாம்பூ சிறிது கலந்து கால்களை அதனுள் அமிழ்த்தி பியூமிக்ஸ்டோன் கொண்டு தேய்த்து ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மாய்ச்ரைஸர் தடவ வேண்டும். பாதம் பட்டு போல் மென்மையாக இருக்கும்.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

வயிற்றுப் புண்களை ஆற்றும் ‘கருப்பு கசகசா’

திருநீற்று பச்சிலையோட விதைகள்தான் சப்ஜா விதைகள். சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள். பழச்சாறு, லஸ்ஸி, ஃபலூடா போன்றவற்றில் சேர்க்கப்படும் இந்த கருப்பு கசகசாவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த விதைகளை நீரில் ஊற வைத்து பயன்படுத்த
வேண்டும்.

*பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

*ஜீரண  பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்றுப் பொருமல், கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும்.

* மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

* இதன் இலையின் சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்து வந்தால் பருக்கள் மறைவது மட்டும் இல்லாமல், தழும்பகள் தோன்றாமல் பாதுகாக்கும்.

* ஒரு கைப்பிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தினால், மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

*காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

* கோடை காலத்தில் நன்னாரி சர்ப்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

- கவிதா சரவணன், திருச்சி.

அன்னம் அரசு