பாட்டி வைத்தியம்



வாசகர் பகுதி

*எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து தினமும் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*ஒரு டம்ளர் அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

*மஞ்சள் தூளை தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால்  சேற்றுப்புண் ஆறிவிடும்.

*துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுத்தால் உணவு வாந்தி நிற்கும்.

*நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலை பாரம் குறையும்.

*கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.

*கரிசலாங்கண்ணி இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

*ஒரு செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

*சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

*ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

*தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால், ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

*ஒரு கையளவு ஓமத்துடன் மூன்று வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்றுப் பொருமல் குணமாகும்.

*மணத்தக்காளி கீரையை துவரம் பருப்புடன் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் ஆறும்.

*ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தைப் பொரித்து இடித்து மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

- கே.காசி, திருவண்ணாமலை.