ஆற்றின் அலை!



சீனாவின் ஹாங்ஷு மாகாணத்தில் ஓடும் குயின்டாங் நதி, தன் முகத்துவாரத்தை அடையும்போது ஏராளமான மண்ணை அள்ளிச் செல்லும். அப்போது கரைகளில் மோதி பெரும் அலைகள் உருவாகும். பல மீட்டர் உயரத்துக்கு எழுகிற இந்த அலைகளை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளையும் சமயங்களில் இந்த அலை மிரட்டி விரட்டும்!