மன்னிப்பு கேட்டு மர்டர்!



உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் மன்னிப்பு கேட்டு மர்டர் செய்த நண்பர்களின் சம்பவம் மக்களை  பீதிக்குள்ளாக்கியுள்ளது.நிஷாந்த் சௌத்ரி, விக்ராந்த், அங்கித் ஆகியோர் இல்லீகல் பஞ்சாயத்துகளை ரெகுலராக செய்து  வந்த நண்பர்கள். அசைன்மென்டுகள் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நிஷாந்துக்கும் விக்ராந்த் மற்றும் அங்கித்  ஆகியோருக்கிடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அங்கித் மற்றும் விக்ராந்த் சற்று இறங்கி வந்து நிஷாந்தை  நேரில் சந்தித்து சாரி சொல்லி ஒன்று சேர விரும்பினர்.
 
நிஷாந்த் இதற்கு சம்மதித்து ஸ்பாட்டுக்கு வர, கடுமையாக அவரைக் கிண்டல் செய்து விக்ராந்த்-அங்கித் பேச, களம்  கலவரமானது. இம்முறை தன் நாட்டுத் துப்பாக்கி மூலம் பதில் சொன்னார் விக்ராந்த். காயம்பட்ட நிஷாந்த்  மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே இறக்க, போலீஸ் துப்பாக்கியும் கையுமாக விக்ராந்த் - அங்கித்தை கைது  செய்துள்ளது.
                         

- ரோனி