தோழியருக்கான நட்சத்திர பலன்கள் அக்டோபர் 1 முதல் 15 வரை-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்



அஸ்வினி: குடும்ப பாசம் மிகுந்தவரான நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். 2ல் ராகு - 6ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 7ல்  சுக்கிரன் -  8ல் கேது - 10ல் குரு(வ), சனி என கிரக நகர்வுகள் இருக்கிறது. பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

பரணி: அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காத நீங்கள் பிரச்சனையை கண்டு பயப்படமாட்டீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். 2ல் ராகு - 6ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 7ல்  சுக்கிரன் -  8ல் கேது - 10ல் குரு(வ), சனி என கிரக அமைப்பு இருக்கிறது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நவகிரகங்களை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

கார்த்திகை: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஸ்ரீரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும்.

ரோஹிணி: அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். 1ல் ராகு - 5ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 6ல்  சுக்கிரன் -  7ல் கேது - 9ல் குரு(வ), சனி என கிரக இருப்பு இருக்கிறது. திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை  திறமையாக சமாளித்து விடுவீர்கள். நெருக்கடியான சூழ்நிலையை சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். ஆதிபராசக்தி அன்னையை வணங்க உடல் ஆரோக்கியத்தை தரும்.

மிருகசீரிஷம்: இயல்பிலேயே மற்றவர்களை அதிகாரம் செய்வதில் பிரியமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல், அதிருப்தி உண்டாகலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும்.

திருவாதிரை:  சுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். 4ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 5ல்  சுக்கிரன் -  6ல் கேது - 8ல் குரு(வ), சனி - 12ல் ராகு என கிரக நகர்வு இருக்கிறது. பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகள் வேகம் பிடிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்மரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும்.

புனர்பூசம்: பிரச்சனையை சமாளிக்கும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த காலகட்டத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை விலகும்.

பூசம்: கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ள உங்களுக்கு தெய்வீக ஈடுபாடும் இருக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். 3ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 4ல்  சுக்கிரன் -  5ல் கேது - 7ல் குரு(வ), சனி - 11ல் ராகு என கிரக ஓட்டம் இருக்கிறது. தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

ஆயில்யம்: எந்த ஒரு வேலையிலும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே அதை செய்யும் குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் அலைச்சல் குறையும். 3ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 4ல்  சுக்கிரன் -  5ல் கேது - 7ல் குரு(வ), சனி - 11ல் ராகு என கிரக ஓட்டம் இருக்கிறது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். நவகிரகத்தில் புதபகவானுக்கு மரிக்கொழுந்து சாற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

மகம்: உழைப்புக்கு அஞ்சாத நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து சீராக இருக்கும். 2ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 3ல்  சுக்கிரன் -  4ல் கேது - 6ல் குரு(வ), சனி - 10ல் ராகு என கிரகங்களின் இருப்பு இருக்கிறது. வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. விநாயகப்பெருமானை வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.

பூரம்: யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். 2ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 3ல்  சுக்கிரன் -  4ல் கேது - 6ல் குரு(வ), சனி - 10ல் ராகு என கிரகங்களின் அமைப்பு இருக்கிறது. கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். ஆஞ்சநேயரை வணங்கி வர பொருளாதாரம் மேம்படும், தைரியம் உண்டாகும்.

உத்திரம்: மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பதும் நல்லது. சாய்பாபாவை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம்: சாமர்த்தியமாக செயலாற்ற தெரிந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனதில் நம்பிக்கை உண்டாகும். 1ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 2ல்  சுக்கிரன் -  3ல் கேது - 5ல் குரு(வ), சனி - 9ல் ராகு என கிரகங்களின் ஸ்தானம் இருக்கிறது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். முருகனை வணங்க வாழ்க்கை வளம்பெறும்.

சித்திரை: விடா முயற்சியுடன் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் உண்டாகும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். மாரியம்மனை வணங்க குழப்பங்கள் தீரும்.

சுவாதி: சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 1ல்  சுக்கிரன் -  2ல் கேது - 4ல் குரு(வ), சனி - 8ல் ராகு - 12ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகிறார்கள். வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தரும் . விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.லஷ்மி நரசிம்மரை வணங்க குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும்.

விசாகம்: தைரியமாக எதிலும் முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். மனக்கவலை அகலும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். மதுரை மீனாட்சியம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அனுஷம்: எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனோ தைரியம் உண்டாகும். 1ல் கேது - 3ல் குரு(வ), சனி - 7ல் ராகு - 11ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 12ல்  சுக்கிரன் என கிரகங்களின் நகர்வு இருக்கிறது. மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையான பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன்-மனைவிக்கிடையே அனுசரித்தால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும்.

கேட்டை: அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஏதாவது மனக்கவலை இருக்கும். 1ல் கேது - 3ல் குரு(வ), சனி - 7ல் ராகு - 11ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 12ல்  சுக்கிரன் என கிரகங்கள் அமைப்பு இருக்கிறது. எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். கிராம தெய்வத்தை வணங்கி வர சுகம், சௌக்கியம் உண்டாகும்.

மூலம்: அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பயணங்களால் நன்மை உண்டாகும். 2ல் குரு(வ), சனி - 6ல் ராகு - 10ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 11ல்  சுக்கிரன் - 12ல் கேது என கிரகங்கள் அருள் இருக்கிறது.  மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எச்சரிக்கையும் கவனமும் தேவை. குடும்பத்தில் டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். அம்மனை வணங்க காரியதடை நீங்கும்.

பூராடம்: கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் திடீர் கோபம், டென்ஷன் ஏற்படலாம். 2ல் குரு(வ), சனி - 6ல் ராகு - 10ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 11ல்  சுக்கிரன் - 12ல் கேது என கிரகங்கள் இருக்கிறார்கள். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன்-மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அனுகூலம் உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபட கஷ்டம் நீங்கும்.


உத்திராடம்: அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன்-மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். ஸ்ரீரமண மகரிஷியை வணங்க மன அமைதி கிடைக்கும்.

திருவோணம்: கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான உங்களுக்கு இந்த காலகட்டத்தில் விருப்பங்கள் கைகூடும். 1ல் குரு(வ), சனி - 5ல் ராகு - 9ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 10ல்  சுக்கிரன் - 11ல் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்தி தரும். விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும்.

அவிட்டம்: அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வதால் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். நந்தீஸ்வரரை வணங்க கஷ்டங்கள் தீரும்.


சதயம்: போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் உங்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு சரியாகும். 4ல் ராகு - 8ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 9ல்  சுக்கிரன் - 10ல் கேது - 12ல் குரு(வ), சனி என கிரகங்கள் இருக்கிறார்கள். எதிலும் மந்தமான சூழ்நிலையே உருவாகும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க சிக்கல்கள் தீரும்.

பூரட்டாதி: எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் நீங்கள் உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் இருந்த மன
வருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். ராமரை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

உத்திரட்டாதி: எந்தநேரத்தில் எதை பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பயணம் செல்ல நேரிடலாம். 3ல் ராகு - 7ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 8ல்  சுக்கிரன் - 9ல் கேது - 11ல் குரு(வ), சனி என கிரகங்கள் நகர்வு அமைந்திருக்கிறது. காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள். மகாலட்சுமியை பூஜிக்க பண பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

ரேவதி: நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்க தயங்காத நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் விருப்பங்கள் நிறைவேறும். 3ல் ராகு - 7ல் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - 8ல் சுக்கிரன் - 9ல் கேது - 11ல் குரு(வ), சனி என கிரகங்களின் ஆசிகள் இருக்கிறது. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பெருமாளை தரிசித்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும்.