ஏரியா லிட்ரேச்சர்
மண்ணு தின்னும் உசுரு!
அப்பன் ஆத்தா யாராலேயும் திருத்த முடியலை என்னை கஞ்சா, சுண்டக்கஞ்சி இல்லாம இருக்க முடியலை எனக்கு கட்டுமரம் வலிச்சி வலிச்சி முதுகு வளையுதே
அக்குளுலே ஊறும் வேர்வை மூக்கில் நாறுதே உசுரோட இருக்கேன் உடம்புலே பொணவாசனை உசுருபோனா எனக்கு அழக்கூட ஆளில்லை
மண்ணு தின்னும் உசுரை சவக்கிடங்கு எலி தின்னட்டும் நான் செத்தாலும் உடம்பு நாலு ஜீவராசிக்கு பயன்படட்டும்!
சீத்தலைப் பாட்டனார்
|