மத்திய அரசின் காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி!



வாய்ப்பு

மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர், உதவித் துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்
வாணையம் (எஸ்.எஸ்.சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1330 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 97
(Open - 86, Ex-Ser - 11)
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 53  (Open - 53)
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
பணி: Sub-Inspector (GD) in CAPFs - 1180
(Open - 1073), (Ex-Ser - 107)
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன (இருசக்கர வாகனம் மற்றும் கார்) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு (PST,PET) மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி, எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ssc.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 2.4.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/noticesicpo2018_03032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.