இன்பமான வெற்றி
சரோஜதேவி பதில்கள்
ஆண்மை பலி ஆவது எப்போது? - கே.நடராஜன், திருவண்ணாமலை. பெண்மை காவு கேட்கும்போது.
சில பெண்கள் வயது கூடக் கூட அழகும், பொலிவுமாக வலம் வருகிறார்களே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. இயல்பாக கனிகிறார்கள் என்று அர்த்தம்.
இரவில் நடக்கும் போர் மட்டும் ஏன் இருவருக்குமே போர் (bore) அடிப்பதில்லை? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ஏனெனில் வெற்றி இருவருக்கும்தானே? இன்பமான வெற்றி கசக்குமா என்ன?
காமம் எப்போது புனிதமாகிறது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். ஒரு புது உயிரை உலகுக்கு தரும்போது.
தை பொறந்தா வழி பொளக்குமா? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இரட்டை அர்த்தத்துலே பேசாதீங்க செல்வராஜ் சார். ‘பொளக்குமா’ இல்லை, ‘பொறக்குமா’ன்னு கேட்கணும்.
|