இன்பமான வெற்றி



சரோஜதேவி பதில்கள்

ஆண்மை பலி ஆவது எப்போது?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
பெண்மை காவு கேட்கும்போது.

சில பெண்கள் வயது கூடக் கூட அழகும், பொலிவுமாக வலம் வருகிறார்களே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இயல்பாக கனிகிறார்கள் என்று அர்த்தம்.

இரவில் நடக்கும் போர் மட்டும் ஏன் இருவருக்குமே போர் (bore) அடிப்பதில்லை?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
ஏனெனில் வெற்றி இருவருக்கும்தானே?
இன்பமான வெற்றி கசக்குமா என்ன?

காமம் எப்போது புனிதமாகிறது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஒரு புது உயிரை உலகுக்கு தரும்போது.

தை பொறந்தா வழி பொளக்குமா?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக் மாதிரி இரட்டை அர்த்தத்துலே பேசாதீங்க செல்வராஜ் சார். ‘பொளக்குமா’ இல்லை, ‘பொறக்குமா’ன்னு கேட்கணும்.