2000 முதலைகள் இணைந்து நடிக்கும் படம்!



பெரிய இயக்குநர்கள் விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்துவரும் நிலையில் மற்ற இயக்குநர்கள் எலி, புலி என்று விலங்குகளை வைத்து படம் எடுத்துவருகிறார்கள்.
அவ்வரிசையில் முதலையை வைத்து ‘ஆண்கள் ஜாக்கிரதை’ உருவாகி வருகிறது. முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பு ஜெமினி ராகவா.படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரனிடம் பேசினோம்.

“இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது. அந்தக் காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும். அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட் காட்சி’’ என்றார்.

- எஸ்