அரைத்த மாவையே!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

முன்னட்டை ஓவியா மங்கள கரமென்றால், பின்னட்டை ஓவியா புரட்சிகரம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்க ‘மொத்தமா அள்ளிட்டாங்க’ ஸ்டில், பகீர் ரகம். என்னவோ அந்த இடத்துலே கிள்ளிட்டாங்க என்பது போல அம்மணி போஸ் கொடுத்திருக்காங்க.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ரம்யா நம்பீசனை அரசியலுக்கு அழைத்தது நல்ல விஷயம்தான். அரசியல் அழகாகட்டும்!
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

நடிப்பு வரவில்லை என அழுதேன் என்று சாய்பல்லவி சொல்லியிருப்பது அவரது தொழில் மீதான பக்தியை காட்டுகிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் அமையும்.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

‘வண்ணத்திரை’க்காக மனம் திறந்து எஸ்.ஜே.சூர்யா பேசியது சிறப்பு. பணத்தைவிட மனத்திருப்திதான் முக்கியம் என்கிற அவரது கருத்து, சினிமாத்துறையினருக்கு மட்டுமல்ல. எல்லாத் துறையிலும் பணியாற்றுபவர்களுக்கானது.
- மணிவாசகம், தேனி.

‘அரைத்த மாவையே அரைப்பது’ என்பதற்கு சரோஜாதேவி கொடுத்த அருஞ்சொற்பொருள் ஆஹா... ஓஹோ..
- கே.இளங்கோவன், மயிலாடுதுறை.

அரசு வேலைக்காக இசை சாம்ராஜ்யத்தை இழந்த ஜென்ஸி குறித்த ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ அத்தியாயம் பிரமாதம்.
- குந்தவை, தஞ்சாவூர்.