பஞ்சராயிட்டா ஆபத்து!
சரோஜாதேவி பதில்கள்
* வனப்பு - கவர்ச்சி : விளக்குக! - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம். வனப்பெல்லாம் கவர்ச்சியாகத்தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. கோணிமூட்டை கூட பம்மெனத்தான் இருக்கும்.
* நிர்வாணம் - அரை நிர்வாணம் : என்ன வேறுபாடு? - த.சத்தியநாராயணன், அயன்புரம். அரைதான் வேறுபாடு.
* காதலியை பஞ்சணைக்கு அழைக்கலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) பார்த்து செய்யுங்க. பஞ்சர் ஆயிட்டா ஆபத்து.
* அழகிகளைக் காணும்போதெல்லாம் ரத்தம் சூடாகி, நரம்பு முறுக்கேறுதே? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. எப்பவும் முறுக்கிட்டிருந்தா நொறுங்கிடும். அப்பப்போ உணர்ச்சிகளுக்கும் வடிகால் வேணும்.
* மனம் ஒரு குரங்காவது எப்போது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ஏறுவதற்கு வாகான மரத்தைக் காணும்போது.
|