பஞ்சராயிட்டா ஆபத்து!



சரோஜாதேவி பதில்கள்

* வனப்பு - கவர்ச்சி : விளக்குக!
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
வனப்பெல்லாம் கவர்ச்சியாகத்தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. கோணிமூட்டை கூட பம்மெனத்தான் இருக்கும்.

* நிர்வாணம் - அரை நிர்வாணம் : என்ன வேறுபாடு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அரைதான் வேறுபாடு.

* காதலியை பஞ்சணைக்கு அழைக்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
பார்த்து செய்யுங்க. பஞ்சர் ஆயிட்டா ஆபத்து.

* அழகிகளைக் காணும்போதெல்லாம் ரத்தம் சூடாகி, நரம்பு முறுக்கேறுதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
எப்பவும் முறுக்கிட்டிருந்தா நொறுங்கிடும். அப்பப்போ உணர்ச்சிகளுக்கும் வடிகால் வேணும்.

* மனம் ஒரு குரங்காவது எப்போது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஏறுவதற்கு வாகான மரத்தைக் காணும்போது.