ஏழைகளின் வயாகரா!
சரோஜாதேவி பதில்கள்
* காமத்தின் நிறம் என்ன? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. சிலருக்கு நீலம்; சிலருக்கு மஞ்சள்; நிறமா பாஸ் முக்கியம்?
* கோன் ஐஸ்-கப் ஐஸ்-குல்பி ஐஸ்; எது சூப்பர்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். குல்பிதான். ஏழைகளின் வயாகரான்னே அதை சொல்லலாம்.
* அணில் கடித்த பழத்துக்கு மட்டும் ஏன் அதிக சுவை? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. அணிலுக்கு எது காய், எது பழமென்று தெரியும். சுவையான பழத்தைத்தான் தேர்ந்தெடுத்து கடிக்கும்.
* பெட்ரூம் காட்சிகளில் நடிப்பவர்கள் எப்படி உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்? - அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி. யூனிட் ஆட்கள் சுற்றி 100 பேர் இருக்க எப்படி சார் உணர்ச்சி வரும்?
* புரட்டாசியில் ‘புரட்சி’ செய்யலாமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. நான் ஏதாவது யதார்த்தமாக சொல்லப் போயி, ஹெச்.ராஜா என்னை பதார்த்தமாக்கிடப் போறாரு. ஆளை விடுங்க சாமி!
|