சட்டம் அவன் கையில்!



அறிமுக நாயகன் ஆதிக் பாபு நடிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’. நாயகியாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபிநயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கபிலன், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் டிஸ்னி.

படம் குறித்து இயக்குநர் டிஸ்னி கூறுகையில், “யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தியடைந்த ஒருவன் தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கக் காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான்.

அவனால் கயவர்களைத் தண்டிக்க முடிந்ததா, இல்லையா என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன். புதுமுகங்கள் படமாக இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்துள்ளேன்’’ என்றார்.

- ரா