அதிகாலை அற்புதக் காட்சி!
சரோஜாதேவி பதில்கள்
* மார்னிங், மேட்னி, ஈவ்னிங், நைட். நாலு காட்சிகளில் எந்தக் காட்சியில் படம் பார்க்கலாம்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு நான்குமே அல்ல. அதிகாலை காட்சியில்தான் அற்புதம் தெரிகிறது என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.
* இரவுக்கு ஆயிரம் கண்களா...? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. நோ... மூடநம்பிக்கை. பகலில் கண்களும், இரவில் கைகளும் சிறப்பாகச் செயல்படும்.
* திடீர் திடீரென சில பெண்கள் குண்டாகிறார்களே? - கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு. உண்டானால் குண்டாவது இயல்புதான்.
* ஆண் vs பெண். இருவரின் வெட்கத்திலும் என்ன வேறுபாடு? - த.சத்தியநாராயணன், அயன்புரம். ஆணுக்கு வெட்கப்படுவது போல நடிக்கக்கூடத் தெரியாது.
* ஐபிஎல் பார்க்கிறீர்களா? - கார்த்திகேயன், ஜோலார்பேட்டை. பேட்டைச் சுழற்றியடித்தால் பந்து பறக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.
|