பிரிச்சி மேயுறது!
சரோஜாதேவி பதில்கள்
* இந்தக்காலப் பெண்கள் முகத்துக்கு மஞ்சள் தேய்ப்பதில்லையே? - கே.நடராஜன், திருவண்ணாமலை. எவ்வளவோ விஷயங்களில் ‘டெவலப்’ ஆகியிருக்காங்க. அதையெல்லாம் பாருங்க சார்.
* தனிமையிலே இனிமை காணலாமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. பழகிட்டா உங்க கைரேகையை வெச்சு ஜோசியமே பார்க்கமுடியாது.
* மனைவி சொல்படிதான் கணவன் நடக்க வேண்டுமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) பகலில் நடப்பது அவரவர் இஷ்டம். நைட்டில் வேற வழியே இல்லை.
* தேனடை என்றால் என்ன? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். தேனீக்கள் தேன் சேகரித்து வைத்திருக்கும் கூடு. அத்துமீறி பிரவேசிக்க நினைப்பவர்களை தேனீ கொட்டும்.
* அதென்னங்க பிரிச்சி மேயுறது? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. யாராவது சாமியாரைப் பார்த்து கேளுங்க. அவங்கதான் இப்போல்லாம் புகுந்து விளையாடுறாங்க.
|