பிரிச்சி மேயுறது!



சரோஜாதேவி பதில்கள்

* இந்தக்காலப் பெண்கள் முகத்துக்கு மஞ்சள் தேய்ப்பதில்லையே?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
எவ்வளவோ விஷயங்களில் ‘டெவலப்’ ஆகியிருக்காங்க. அதையெல்லாம் பாருங்க சார்.

* தனிமையிலே இனிமை காணலாமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பழகிட்டா உங்க கைரேகையை வெச்சு ஜோசியமே பார்க்கமுடியாது.

* மனைவி சொல்படிதான் கணவன் நடக்க வேண்டுமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
பகலில் நடப்பது அவரவர் இஷ்டம். நைட்டில் வேற வழியே இல்லை.

* தேனடை என்றால் என்ன?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
தேனீக்கள் தேன் சேகரித்து வைத்திருக்கும் கூடு. அத்துமீறி பிரவேசிக்க நினைப்பவர்களை தேனீ கொட்டும்.

* அதென்னங்க பிரிச்சி மேயுறது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
யாராவது சாமியாரைப் பார்த்து கேளுங்க. அவங்கதான் இப்போல்லாம் புகுந்து விளையாடுறாங்க.