கவர்ச்சி வேட்டைக்காரி!



தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்துவரும் சன்னி லியோன், பத்திரிகையாளர்களிடம் நெருங்கிப் பழக விரும்புகிறார் (ஹலோ, வேறெதாவது நெனைச்சுக்காதீங்க. வெறும் நட்பு மட்டும்தான்). ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போதும் ஏதாவது ஒரு ‘மெசேஜ்’ சொல்கிறார். சமீபத்தில் விமான நிலையத்தில் பார்த்து, ‘ஹாய்’ சொன்னோம்.

“கொஞ்சநாள் முன்னாடி தென்னாப்பிரிக்காவில் ‘லயன்ஸ் பார்க்’ போயிருந்தேன். அங்கே நிறைய சிங்கங்களைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவில் சிங்கங்களை வேட்டையாடும் வழக்கம் இருக்கு. இப்போ அரிய உயிரினமாகிக் கொண்டிருக்கும் சிங்கங்களை பாதுகாக்கவே அந்த பூங்கா அமைச்சிருக்காங்க. காட்டோட ராஜான்னு நாமதான் சொல்லுறோம். அங்கே சிங்கங்கள் நமக்கு பயந்து ஓடி ஒளிஞ்சிக்கிட்டிருக்கு.

இன்னும்கூட மனித மிருகங்கள், சிங்கங்களை வேட்டையாடுவதை முழுமையாகத் தடுக்க முடியலைன்னு சொல்லுறாங்க” என்று சிங்கங்களுக்காக உருகினார்.சன்னி லியோனின் கவர்ச்சி வேட்டையில் இங்கே பலியான சிங்கங்களைப் பற்றி நாமும் எடுத்துச் சொல்லலாம் என்றால், அதற்குள்ளாக அவர் மும்பை செல்லவேண்டிய விமானம் தயாராகிவிட்டது.

- மை.பா.