வூடு கட்டி அடிக்கிறார் நிகிஷா!



அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷாபடேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ‘தலைவன்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் தலை காட்டியவர் இப்போது ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கில் ஆக்‌ஷன் ரோல் ஒன்றில் புக் ஆகியிருக்கிறாராம். முகுல்தேவ் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் தான் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக மிளிர முடியும் என்று நம்புகிறார்.

“அந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறேன். நீண்டகாலமாகவே ஆக்‌ஷன் வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களையே ஒப்புக் கொள்வேன்” என்று தில்லாகப் பேசுகிறார் நிகிஷா.

- எஸ்