மடிப்பு ஜோசியம்!



சரோஜாதேவி பதில்கள்

* அடிக்கடி கூறும் பொய் எது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வயசும், சைஸும்.

* காதலில்கூட கலப்படம் வந்துவிட்டதாமே?
- ப.முரளி, சேலம்.
ஆசைக்கு காதலித்தது போக, ஆஸ்திக்கு காதலிப்பதால் வரும் வினை.

* சேலை கசங்காமல் காதலிக்க முடியுமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
தோலை உரிக்காமல் வாழைப்பழம் சாப்பிடமுடியுமா?

* இடுப்பைப் பார்த்து ஜோசியம் சொல்கிறார்களாமே?
- மாயூரம் ச.க.சரவணன், மாப்படுகை.
மடிப்பு ஜோசியமா இருக்கும்.

* மவுனம் எப்போது சம்மதமாகிறது?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
இருட்டில்.