மன்மத வெள்ளம் பாயும் போது...
சரோஜாதேவி பதில்கள்
* கணவன், மனைவிக்கு அடங்கிப் போகலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)அடங்கினால்தான் ஆனந்தம்.
* பத்தினி பற்றவைத்தால் வாழைமரம் எரியுமாமே? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். மூடநம்பிக்கைகளை ஏன் பெண்கள் தலையிலேயே கட்டுகிறார்கள். யோக்கியன் கால் வைத்தால் கடலே வற்றும் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.
* சாமியார்களுக்கு மட்டும் ஏன் அதிக ஆசை? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. ஆசைக்கு அணைபோட முயற்சிக்கிறார்கள். அளவுக்கதிகமாக மன்மத வெள்ளம் பாயும்போது மதகுகள் தகர்கின்றன.
*பெண் என்பவள் பூந்தோட்டமா, பழத்தோட்டமா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பூவாகி, காயாகி, கனிபவள்.
* ‘வயாக்ரா வார்த்தை லேடி’ என்கிற பட்டத்தை உங்களுக்குத் தரலாமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ‘சரோஜாதேவி பதில்கள்’ படித்து ரொம்ப ஸ்டெடி ஆகிவிட்டீர்கள் போலிருக்கே!
|