ராக்கெட் லாஞ்ச்!



சரோஜாதேவி பதில்கள்

* பரந்த மனசு கொண்டவர்களுக்கு சினிமாவில் இடமுண்டா?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.
அவர்களுக்குத்தான் பிரதான இடமே.

* சினிமாவில் ஆபாசத்தின் ஆரம்பம் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘கிளாமர் தப்பில்லே, ஆபாசம்தான் தப்பு’ என்று சப்பைக்கட்டு கட்டத் தொடங்குகிறார்களே, அதுதான் ஆரம்பம்.

* காதலித்தால் கவிதை வருமா?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
காமம்தான் முதலில் வரும்.

* முதலிரவென்றாலே சில புதுமாப்பிள்ளைகள் பயப்படுகிறார்களே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ராக்கெட் நல்லபடியாக  லாஞ்ச் ஆகி, விண்ணில் நிலைநிறுத்தப்பட வேண்டுமே என்கிற டென்ஷன்தான்.

* இளமைக்கு எது வேகத்தடை?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வெளிச்சம். இளமையும், இருளும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள்.