தோ தோ தோனி!



சொந்த நிறுவனமான ‘செயின்ட் ட்யூன்ஸ்’ மூலம் பக்தி ஆல்பங்கள் மற்றும் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்த அனுபவம் உள்ளவர் குமார் நாராயணன். ஜாஸ், ஹிப் ஹாப், நாட்டுப்புற இசை என இவரது பயணம் தொடர்கிறது. பாடகர், ஒலிப்பொறியாளர் என்கிற கூடுதல் தகுதியும் இருக்கிறது.

இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பெண்கள் தின பாடல்கள், சுதந்திர தின பாடல்கள் என வெளியிட்டு, யூ-டியூபில் கவனம் பெற்றிருக்கிறார். ‘உருகினேன்’ என்ற தலைப்பில் இவர் இசையமைத்த ஐந்து காதல் பாடல்கள் அடங்கிய ஆல்பத்துக்கு திரைத்துறை இசைக்கலைஞர்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னையில் ‘சூப்பர் கிங்ஸ்’ நடந்தபோது, ‘தோ தோ தோனி’ என்ற பாடலை அமைத்து, கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறார் நாராயணன். தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக ‘எதிர்மறை’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார் இவர். திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் பாணியில் இசையமைக்கவேண்டும் என்பது இவரது லட்சியம்.

- நெல்பா