சிவாஜி வேடத்தில் ராஜ்கிரண்!



திரைசரம்!

சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தில் ராஜ்கிரண் நடித்த வேடத்துக்காக சிவாஜி கணேசனைத்தான் முதலில் அணுகினார் இயக்குநர் பாலா. கேரக்டர் பிடித்திருந்தும், அப்போது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் தன்னால் நடிக்க முடியவில்லை என்று வேதனையோடு மறுத்தார் சிவாஜி. அது நடிகர் திலகத்துக்காக ஏற்படுத்தப்பட்ட கேரக்டர் என்பதை அறிந்ததும் மிகவும் பயபக்தியோடு நடித்தாராம் ராஜ்கிரண்.

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், விந்தியா நடித்த ‘ஆறுவது சினம்’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடந்தது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக அப்படம் அப்படியே கைவிடப்பட்டது. அந்தக் கதையின் சில பகுதிகளை மட்டும் மாற்றி எழுதிய மணிவண்ணன், ‘ஆண்டான் அடிமை’ என்கிற பெயரில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி ஆகியோரை வைத்து மீண்டும் வேறு படத்தை உருவாக்கினார்.