புவியீர்ப்புதான் காரணம்!



சரோஜாதேவி பதில்கள்

* விரதம் இருப்பதுண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மாசத்துக்கு மூணு நாள் மட்டும்.

* பெண்ணை தொடாமல் காதலிக்க முடியாதா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
கண்ணைத் திறக்காமல் சித்திரம் வரைய முடியுமா?

* பெரும் நடிகைகளின் ‘மார்க்கெட்’ திடீரென சரிவது ஏன்?
- ப.முரளி, சேலம்.
புவியீர்ப்புதான் காரணம்.

* மன்மதக் கலையின் உச்சத்தை எட்டினால் பரிசு கிடைக்குமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பரிசு ரெடியாக பத்து மாதம் ஆகும்.

* திருட்டு மாங்காய் இனிக்கிறதே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
ஓசியில் கிடைத்தால் பாகற்காய் கூடத்தான் இனிக்கும்.