புவியீர்ப்புதான் காரணம்!
சரோஜாதேவி பதில்கள்
* விரதம் இருப்பதுண்டா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. மாசத்துக்கு மூணு நாள் மட்டும்.
* பெண்ணை தொடாமல் காதலிக்க முடியாதா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்) கண்ணைத் திறக்காமல் சித்திரம் வரைய முடியுமா?
* பெரும் நடிகைகளின் ‘மார்க்கெட்’ திடீரென சரிவது ஏன்? - ப.முரளி, சேலம். புவியீர்ப்புதான் காரணம்.
* மன்மதக் கலையின் உச்சத்தை எட்டினால் பரிசு கிடைக்குமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. பரிசு ரெடியாக பத்து மாதம் ஆகும்.
* திருட்டு மாங்காய் இனிக்கிறதே? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். ஓசியில் கிடைத்தால் பாகற்காய் கூடத்தான் இனிக்கும்.
|