ரகசியம் காக்கிறார் கமல்!



கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் ஒருவழியாக தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்கிறார்கள். காலில் அடிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கமலுக்கு இந்தச் செய்தி உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இப்போது அவர் இயக்கி நடித்துவரும் ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு அடுத்த படம் என்ன என்பதையும் முடிவு செய்துவிட்டாராம்.

தன் வாழ்வின் மிக முக்கியமான ஒருவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் இந்த டைட்டிலை தேர்ந்தெடுத்திருக்கிறாராம். “தகுந்த நேரம் வரும்போது அந்த டைட்டிலை சொல்லுவேன், அதுவரை ரகசியம்” என்று தன்னை பார்ப்பவர்களிடம் சொல்லி சிரிக்கிறாராம். இப்போது கோடம்பாக்கத்தில் யாரேனும் இருவர் சந்தித்துக் கொண்டாலே, கமலின் அடுத்த பட டைட்டில் என்ன என்கிற விவாதம்தான் களை கட்டுகிறது.

- தேவராஜ்