தமிழில் மீண்டும் மம்முட்டி!



நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் பிஸியாகிறார் மம்முட்டி. அவர் நடிக்கும் ‘பேரன்பு’ படத்தை ராம் இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் முடிந்துவிட்டது.

சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இதையடுத்து சீனுராமசாமி சொல்லியிருக்கும் கதை ஒன்றுக்கு மம்முட்டி ‘ஓக்கே’ சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். “நான் கதை சொன்னது உண்மைதான்.

அவருக்கும் கதை பிடித்திருக்கிறது. மற்ற விஷயங்கள் அதுவாக வெளியே வரும்வரை கொஞ்சம் பொறுமையாக இருங்களேன்” என்கிறார் சீனுராமசாமி. அவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யாராஜேஷ் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ படம் எப்போது வெளிவரும் என்று கேட்டாலும் ‘பொறுமையாக இருங்களேன்’ என்று சிரித்தவாறே சொல்கிறார்.

- ராஜ்