தமிழில் பெருகுது மாற்று அரசியல் படங்கள்!
தமிழில் மாற்று அரசியலை பேசக்கூடிய படங்கள் ஏராளமாக உருவாகி வருகின்றன. இதற்கு காரணம் அரசியல் பிரக்ஞையுடைய இளைஞர்களின் வரவு. ‘பச்சை என்கிற காத்து’ பொருளாதாரரீதியாக பெரிதாகப் போகாமல் இருந்திருந்தாலும், அப்படம் தொட்டுப் பேசிய பிரச்னை மக்களின் நெஞ்சைச் சுட்டது. அப்படத்தை இயக்கியவர் கீரா.
தமிழ் தேசிய உணர்வு கொண்ட இவர் இப்போது விஷ்ணுப்பிரியன், கன்னட வரவான அஸ்வினி ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘மெர்லின்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் காதலை புதிய கோணத்தில் அணுகுகிறதாம். அடுத்து அதிரடியான அரசியல் கதை ஒன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
- லார்டு கிங்
|