இரண்டாம் பாக ஜுரம்!



தற்போது தமிழில் இரண்டாம் பாக படங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படுகின்றன.

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள படங்கள் :

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்காக ‘எந்திரன்-2’, லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுக்கு ‘சண்டக்கோழி-2’, ராஜ்கிரண் தயாரித்து, அவரே இயக்கி நடிப்பதற்காக ‘என்  ராசாவின் மனசிலே-2’, ‘மதுரை டூ தேனி-2’ ஆகியவை.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் பாக படங்கள் :

சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை-2’, பாபி சிம்ஹாவின் நடிப்பில் ‘கோ-2’, காமெடி நடிகர் ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர் (என்கிற) முந்தானை முடிச்சு-2’.

ஏற்கனவே ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் படங்கள் :

கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்-2’, தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி-2’, தருண்கோபி இயக்கி நடிக்கும் ‘வெறி (என்கிற) திமிரு-2’, கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ‘அமரன்-2’, சஞ்சய் ராம் இயக்கத்தில் ‘கிளியாந்தட்டு (என்கிற) தூத்துக்குடி-2’

- ராஜ்