சிவகுமார் புகழ்ந்த சினிமா புதுமுகம்!



‘காஞ்சனா-2’ ஹிட்டடித்ததில் லாரன்ஸுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதேயளவு மகிழ்ச்சியில் இருக்கிறார் புதுமுகம் ஜெய் ஆனந்த். ஐ.டி.கம்பெனியில்  கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவரை, ‘விஷால் மாதிரி இருக்கே. ஏன் சினிமால டிரை பண்ணக்கூடாது’ என்று உசுப்பி சினிமாவுக்கு  அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இவரும் தியேட்டர், கூத்துப்பட்டறையில் நடிகராக பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ‘திறப்பு விழா’ படத்தில் ஹீரோவாக நடிக்க  வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு முன்னால் ‘காஞ்சனா’ முந்திக் கொண்டது. ‘காஞ்சனா’ படத்தில் 32 நாட்கள் நடித்தும் இவருடையே போர்ஷன்  மிகவும் குறைவு.

அந்தக் குறையை ‘காஞ்சனா -3ஆம் பாகத்தில் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ். ‘கண்ணாமூச்சி’ என்ற  குறும்படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியிருக்கும் ஜெயா ஆனந்தை ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ‘‘அடுத்த வருடம் இந்நேரம் உலகம் போற்றும் நடிகனாகிவிடுவாய். அதற்கு உன்னைப் படைத்த ஆண்டவன் துணை நிற்பான்’’ என்பதுதான் அந்த  செல்போன் செய்தி.  தகவல் அனுப்பியவர் சிவகுமார்!

-எஸ்