வறண்ட பூமியின் வறுமை



ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி ‘அய்யன்’ படத்தை அடுத்து இயக்கிவரும் படம் ‘சேது பூமி’. ராமநாதபுரம், சிவகங்கை பகுதி மக்களின் வறுமை மற்றும் கோபத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது கதை.

‘சட்டம் ஒரு இருட்டறை’,‘தொட்டால் தொடரும்’ படங்களின் நாயகன் தமன் மற்றும் ‘காடு’ சம்ஸ்கிருதி ஜோடியாக நடிக்கின்றனர்.வறண்ட பூமியை தனது கேமராவால் வளைத்து வளைத்து படம்பிடித்து வசியம் செய்யப்போகிறாராம் எஸ்.முத்துராமலிங்கம்.

‘‘இந்தப்படத்துக்கான கதையை எழுதி முடித்த உடனேயே, அதில் நான் நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பதை உறுதிசெய்துவிட்டேன். நாயகி யின் தாய்மாமா கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக அமைந்திருப்பதாக படக்குழு பாராட்டியதை பெருமையாக நினைக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர்.