சன்னி லியோன் என்றால் இனி டிக்ஷனரியில் சர்ச்சை என்றுதான் பொருள் எழுத வேண்டும். கனடாவில் நீலப்பட நாயகியாக இருந்து பாலிவுட்டில் நுழைந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருப்பவர். அவரின் கனடா படங்களைப் பார்த்து அவரது வெறித்தனமான ரசிகர்களாகியிருக்கிறார்கள் லட்சக்கணக்கான இந்தியக் குடிமகன்கள்.
அதனால் அவர் எங்கு சென்றாலும் டிராபிக் ஜாம்தான், போலீஸ் தடியடிதான். இது ஒருபுறமிருக்க, ஒரு சூரத் வைர வியாபாரி சன்னி லியோனை கனடா படங்களில் பார்த்த மாதிரியே நேரில் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். பல லட்சத்தை வாங்கிக் கொண்டு சன்னியும் அப்படி அவர் முன் போஸ்கொடுத்து திரும்ப, அந்தப் படங்கள் நெட்டில் பரவ, விளைவு? சூரத் போலீசார் சன்னி மீது எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.
சன்னி பற்றி சில பாசிட்டிவான செய்திகளும் உண்டு. அவர் நடித்துள்ள ‘பஹேலி லீலா’ படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் ஒரே ஒரு கட்தான் கொடுத்திருக்கிறார்கள். கணவர் டேனியலுடன் சேர்ந்து படம் தயாரிக்கப் போகிறார். “என் வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டில் அந்தப் படங்களில் நடித்தேன். இப்போது நான் மாறிவிட்டேன். இந்தி நடிகர்களின் மனைவிகள் என்னைப் பார்த்து பயப்படவேண்டாம். எனக்கு கணவர் இருக்கிறார். அவரை மட்டுமே நான் தீவிரமாக காதலிக்கிறேன்” என்று சென்டிமென்டையும் தூவியிருக்கிறார்.