என்.ஆர்.ரகுநந்தன்



‘செந்தில்நாதன்’ என்ற பெயரை ‘என்.ஆர்.ரகுநந்தன்’ என மாற்றிக் கொண்டார். அப்பா செல்லப்பாண்டியன் கதாகாலட் சேபத்தில் பாடியவர். தேனி ஓடப்பட்டி ராஜேஸ்வரியிடம் இசை பயின்றார். பிறகு மெல்லிசைக் குழுக்களில் பாடினார். வெஸ்டர்ன், இந்துஸ்தானி,  கர்நாடக இசை கற்றுள்ளார். சோப் விளம்பரம், ஆல்பங்கள், ஆவணப்படங்களுக்கு இசையமைத்தார். அப்துல்கலாம் எழுதிய ஆங்கிலப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.


ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் பணியாற்றினார். ‘தென்மேற்குப் பருவக்காற்று’ தொடங்கி ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நீர்ப்பறவை’, ‘மதயானைக் கூட்டம்’, ‘புலிவால்’, ‘சிவப்பு’, ‘மஞ்சப்பை’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘சுந்தரபாண்டியன்’, ‘நீர்ப் பறவை’, ‘மதயானைக் கூட்டம்’ படங்களில் ஜி.வி.பிரகாஷை பாட வைத்தார். சினிமாவில் நடிக்கமாட்டேன் என்கிறார்.

- தேவராஜ்