பஞ்சரத்ன தோசை
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், பயத்தம்பருப்பு - 1/4 கப், உளுத்தம்பருப்பு - 1/4 கப், பொட்டுக்கடலை -1/4 கப், அரிசி - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகள் மற்றும் அரிசியை தனித்தனியே ஊற வைக்கவும். 4 மணி நேரம் ஊறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். தோசை மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மாவினால் தோசை வார்க்கவும். தோசை நன்றாக பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பி எடுக்கவும். சூடாக சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.
|