நவதானிய பணியாரம்
என்னென்ன தேவை?
சிவப்பரிசி, புழுங்கல் அரிசி - தலா 1/2 கப், உளுந்து, ஊறவைத்த ஜவ்வரிசி - தலா 1/4 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன், சோயா, கொண்டைக்கடலை - தலா 1/4 கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10, பொடித்த மிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலை, சோயா இரண்டையும் 8 மணி நேரம் ஊறவைக்கவும். சிவப்பரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம், பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அதனுடன் காய்ந்தமிளகாய் சேர்த்து நைசான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்பு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து அரைமணி நேரம் புளிக்க விடவும். பின்பு உப்பு போட்டு குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து மிளகாய், பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: உடனேயே புளிக்க வைக்க தயிர் சேர்க்கலாம்.
|