மூலிகை கஷாயம்



என்னென்ன தேவை?

வெற்றிலை - 6,
கற்பூரவல்லி இலை - 6,
மிளகு - 5, சீரகம் - 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெற்றிலை, கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். கஷாயம் 1/2 கப் அளவிற்கு கொதித்து வந்ததும் இறக்கி வடித்து தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.