தக்காளி வடகம்
என்னென்ன தேவை?
தக்காளி விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி விழுது - 1/2 கப், உப்பு - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, தக்காளி விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்த கலவையை கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.
|