அறுசுவை வடகம்



என்னென்ன தேவை?

அறுசுவை விழுது, அரிசி மாவு - தலா 1 கப்,
தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி - 1/2 கப்,
பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அறுசுவை (பாகற்காய், சுண்டைக்காய், வாழைப்பூ, புளி, வேப்பம் பூ, மாங்காய்) அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, அறுசுவை விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.