சேமியா பனீர் புலாவ்
என்னென்ன தேவை?
சேமியா - 200 கிராம், பனீர் துண்டுகள் - 1 கப், சீரகம் - 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் - தலா 2, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவைக்கு, கீறிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய வெங்காயம் - 1, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து சேமியாவை போட்டு வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி சூடாக்கி பனீர் துண்டு களை பொரித்தெடுத்து ஆற வைக்கவும். அதே கடாயில் சீரகம், பட்டை, லவங்கம், ஏலம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, வடிகட்டிய சேமியா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். பொரித்த பனீர் துண்டுகள், மிளகு தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.
|