தினை சேமியா அல்வா
என்னென்ன தேவை?
தினை சேமியா - 200 கிராம், சர்க்கரை - தேவைக்கு, கேசரி பவுடர் - 1 சிட்டிகை, நெய் - 100 கிராம், எண்ணெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10, பால்கோவா - 50 கிராம், பால் - 100 மி.லி.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பால், சுடுநீர், சர்க்கரை கலந்து, இதில் தினை சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கலவை மற்றும் கேசரி பவுடர், பால்கோவா சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
|