தினை சேமியா அல்வா



என்னென்ன தேவை?

தினை சேமியா - 200 கிராம்,
சர்க்கரை - தேவைக்கு,
கேசரி பவுடர் - 1 சிட்டிகை,
நெய் - 100 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10,
பால்கோவா - 50 கிராம்,
பால் - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பால், சுடுநீர், சர்க்கரை கலந்து, இதில் தினை சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் ஊறவிடவும். கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி ஊறவைத்த கலவை மற்றும் கேசரி பவுடர், பால்கோவா சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.