கம்பு சேமியா புட்டிங்



என்னென்ன தேவை?

கம்பு சேமியா - 100 கிராம்,
நறுக்கிய கேரட், வேகவைத்த பட்டாணி, குடைமிளகாய் - 100 கிராம்,
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 சிட்டிகை,
பச்சைமிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்,
புளித்த மோர் - 2 கப்.

தாளிக்க...

நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புளித்த மோரில்  உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் கொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆவியில் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.