கம்பு சேமியா புட்டிங்
என்னென்ன தேவை?
கம்பு சேமியா - 100 கிராம், நறுக்கிய கேரட், வேகவைத்த பட்டாணி, குடைமிளகாய் - 100 கிராம், தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 சிட்டிகை, பச்சைமிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், புளித்த மோர் - 2 கப்.
தாளிக்க...
நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
புளித்த மோரில் உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் கொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆவியில் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.
|