ஓட்ஸ் புட்டு



என்னென்ன தேவை?

ஓட்ஸ் - 200 கிராம்,
உப்பு - 1 சிட்டிகை, 
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி - 7,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
உலர்ந்த திராட்சை - சிறிது,
நாட்டுச்சர்க்கரை - 200 கிராம்,
சூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். இட்லி பானையில், தட்டில் ஓட்ஸை போட்டு 10-15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து, தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து பிரட்டி வெந்த ஓட்ஸை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்பு: காரமாக வேண்டுமென்றால் எண்ணெயில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, நறுக்கிய காய்ந்தமிளகாயை வதக்கி வெந்த ஓட்ஸுடன் கலந்து கார புட்டு செய்யலாம்.