கார (மசாலா) போளி



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

மைதா மாவு - 1½ கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய்/நெய் - 1/8 கப்.

ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பச்சை பட்டாணி - 1/8 கப்,
வறுத்த முந்திரி - 10,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்றாக மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி கிளறி இறக்கவும். மாவினை சம அளவு உருண் டைகளாக பிரித்து  பூரி அளவிற்கு திரட்டி, நடுவில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து நன்றாக இழுத்து மூடி மெதுவாக திரட்டவும். சூடான தோசைக்கல்லில் போளியை போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.